search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குமரியில் மழை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்கள்- கலெக்டர் அறிவிப்பு
    X

    கலெக்டர் அழகுமீனா

    குமரியில் மழை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்கள்- கலெக்டர் அறிவிப்பு

    • பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
    • இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதற்கிடையே பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கலெக்டர் அழகுமீனா முன்னிலையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில், மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 1077, 04652 231077 மற்றும் 93840 56205 ஆகிய அவரச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.

    Next Story
    ×