search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை - அணை பகுதிகளில் பரவலாக மழை
    X

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை - அணை பகுதிகளில் பரவலாக மழை

    • தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
    • களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும், மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதில் தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 2.6 சென்டி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 1.9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 1.8 சென்டிமீட்டரும், ஊத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும் இன்றும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.60 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாநகர பகுதி முழுவதும் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    Next Story
    ×