search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி சேலம் கோட்டத்தில் நாளை முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    புனித வெள்ளி, வார விடுமுறையையொட்டி சேலம் கோட்டத்தில் நாளை முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் வருகிற 29-ந்தேதி முதல் புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையையொட்டி நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதையொட்டி சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும் இயக்கப்படுகின்றன.

    அதே போல ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவிற்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×