என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ராஜபாளையம் அருகே பெண் அடித்துக்கொலை
- கொலையான காளீஸ்வரிக்கும், அவரது கணவர் பாப்பையனுக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் காளீஸ்வரியை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையன். இவரது மனைவி காளீஸ்வரி (வயது40). இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய் கரையடி அருகே உள்ள செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே சேத்தூர் புறக்காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காளீஸ்வரியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான காளீஸ்வரிக்கும், அவரது கணவர் பாப்பையனுக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காளீஸ்வரி போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும் தெரிகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்