search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பஸ் ஆற்றில் விழுந்து 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி: நேபாளத்தில் சோகம்
    X

    பஸ் ஆற்றில் விழுந்து 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி: நேபாளத்தில் சோகம்

    • நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
    • இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்.

    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபால் கஞ்சில் இருந்து காத்மாண்டுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (67), உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

    பஸ் ஆற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×