search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆன்லைனில் பரவிய அறுவை சிகிச்சை வீடியோ: அதிர்ச்சியடைந்த பெண்
    X

    ஆன்லைனில் பரவிய அறுவை சிகிச்சை வீடியோ: அதிர்ச்சியடைந்த பெண்

    • அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும்.
    • மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சீனாவில் 5 மாதங்களுக்கு முன்பு கோவா என்ற பெண்ணுக்கு மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

    இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த வீடியோவில் கோவாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து கோவா அதிர்ச்சியடைந்துள்ளார்.

    என்னுடைய தனியுரிமையை மருத்துவமனை நிர்வாகம் மீறியுள்ளதாக கூறியுள்ள கோவா, அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டது. இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை எனவும், மருத்துவமனையில் உள்ள 3 மாதங்களுக்கு மேலான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே யார் இந்த வீடியோவை எடுத்தார்கள் என்று கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், இந்த அறுவை சிகிச்சை வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு வேண்டுமானால் உதவி செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த பதிலை கோவா ஏற்கவில்லை. "ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்டிப்பாக வெளியில் உள்ளவர் எடுத்திருக்க முடியாது. மருத்துவமனையில் உள்ள ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும். ஆகவே அந்த வீடியோவை எடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவை எடுத்தவர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் அவரது தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடைசியாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    Next Story
    ×