search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.
    • ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என தெரிவித்தார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் துவங்கி, இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. போர் காரணமாக இருபதரப்புக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 29 மாதங்களாக தொடரும் போரில், ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.

    போரில் ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி நேட்டோ அமைப்பு சார்பிலும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பட்தத்தில் உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே, ரஷியாவுக்கு எதிரான போர் குறித்து உக்ரைன் நாட்டின் உயரிய அதிகாரிகளில் ஒருவரான வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்த குலெபா உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் பட்சத்தில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்று தெரிவித்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனின் உயரதிகாரி குலெபா ஆவார். சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்த குலெபா ஏற்கனவே திட்டமிட்டதை விட அதிக நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரண்டு மிகமுக்கிய விஷயங்களை மட்டுமே முன்வைத்ததாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் குலெபா தெரிவித்தார்.

    "நான் இரண்டு விஷயங்களை மட்டுமே முன்வைத்தேன். முதலில் உக்ரைன் தொடர்பான ஒப்பந்தங்களை உக்ரைன் இல்லாமல் இயற்றக்கூடாது. இரண்டாவது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இவை இரண்டும் ஏற்கப்பட்டால், நாங்கள் எத்தகைய விவாதங்கள் மற்றும் தீர்வுகளை காணவும் தயாராக இருக்கிறோம்," என்று குலெபா தெரிவித்தார்.

    ரஷியா நல்ல உணர்வோடு வரும் பட்சத்தில் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறது. எனினும், ரஷியா தரப்பில் அத்தகை தயார்நிலை தற்போதைக்கு காணப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

    • உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • போரை முடிவுக்கு கொண்டும் வருவதற்கான பேச்சுவார்த்தையில் சீனா முக்கியமான பங்கு வகிக்க முடியும்- உக்ரைன்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து மூன்று ஆண்டுகளாகியுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சீனா ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நட்பு நாடாக இருந்து வருகிறது. இதனால் சீனாவால் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீனாவுக்கு சென்றுள்ளார். ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்த பின் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி முதன்முறையாக சீனா சென்றுள்ளார்.

    உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீன வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். உக்ரைன- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரஷியா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுடன் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை விரும்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    "நியாயமான மற்றும் நிலையான அமைதி நோக்கி செல்வது எங்களுக்கு அவசியம். சீனா இதில் முக்கியமான பங்கு வகிக்க முடியும்" என்றார்.

    ஒருமித்த கருத்தோடு, இணைந்து அரசியல் நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தினருக்கு சீனா உதவி செய்யும் என சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற அமைதி மாநாட்டில் சீனா கலந்து கொள்ளவில்லை.

    • ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்.
    • கடந்த ஜூலை 14ம் தேதி அன்று பான் சியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

    சீனாவை சேர்ந்த, 24 வயதான பான் சியோட்டிங் என்ற இளம்பெண் பிரபல யூடியூப் இன்ப்லூயன்சர் ஆவார்.

    இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூ டியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதன் மூலம், அவர் பிரபலமடைந்தார்.

    இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார்.

    ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் எச்சரித்த போதிலும் அவர் உணவு உண்ணும் சவாலை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 14ம் தேதி அன்று பான் சியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

    சியோட்டிங்-ன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும், செரிக்கப்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சியோடிங்கின் இந்த மரணம் சமூக ஊடகங்களில் கவலையைத் தூண்டியுள்ளது. இதுபோன்ற சவால்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • தினமும் வீட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எழுந்து புறப்பட்டு 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
    • பணி முடிந்த பிறகு மீண்டும் 4 மணிநேரம் பயணம் செய்து தனது வீட்டை அடைவார்.

    கிழக்கு சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பாங் நகரை சேர்ந்தவர் லின்ஷூ . 31 வயதான இவர் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. லின்னின் மனைவியின் சொந்த ஊர் வெய்பாங்.

    அங்கு வசித்து வரும் லின்ஷூ ஷான்டாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்டாவோ நகரில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். தனது வீட்டில் இருந்து அவர் வேலை பார்க்கும் அலுவலகம் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் அலுவலக பகுதியில் தங்கினால் மனைவியை பிரிய வேண்டும் என்பதால் அதற்கு அவர் உடன்படவில்லை.

    இதனால் தினமும் வீட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும் லின்ஷூ 5.20 மணிக்கு வீட்டில் இருந்து புறப்படுகிறார். பின்னர் ரெயிலை பிடிப்பதற்காக 30 நிமிடங்கள் மின்சார பைக்கில் செல்லும் இவர், ரெயில் மூலம் கிங்டாவோ நகருக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து 15 நிமிடங்கள் சுரங்க பாதை வழியாக நடந்து அலுவலகத்துக்கு செல்கிறார்.

    காலை 9 மணிக்கு வேலையை தொடங்கும் லின்ஷூ, பணி முடிந்த பிறகு மீண்டும் 4 மணிநேரம் பயணம் செய்து தனது வீட்டை அடைவார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மனைவியை பிரிய மனமின்றி லின்ஷூ தினமும் சுமார் 8 மணி நேரம் பயணித்து அலுவலகம் சென்று வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    • அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும்.
    • மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சீனாவில் 5 மாதங்களுக்கு முன்பு கோவா என்ற பெண்ணுக்கு மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

    இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த வீடியோவில் கோவாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து கோவா அதிர்ச்சியடைந்துள்ளார்.

    என்னுடைய தனியுரிமையை மருத்துவமனை நிர்வாகம் மீறியுள்ளதாக கூறியுள்ள கோவா, அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டது. இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை எனவும், மருத்துவமனையில் உள்ள 3 மாதங்களுக்கு மேலான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே யார் இந்த வீடியோவை எடுத்தார்கள் என்று கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், இந்த அறுவை சிகிச்சை வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு வேண்டுமானால் உதவி செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த பதிலை கோவா ஏற்கவில்லை. "ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்டிப்பாக வெளியில் உள்ளவர் எடுத்திருக்க முடியாது. மருத்துவமனையில் உள்ள ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும். ஆகவே அந்த வீடியோவை எடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவை எடுத்தவர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் அவரது தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடைசியாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • விபத்தில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
    • ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

    சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் அமைந்துள்ள பாலம், நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.

    காலை நிலவரப்படி 11 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

    இதில், ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டதாகவும், மாயமானவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சீனாவின் தேசிய விரிவான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு 736 பேர், 76 வாகனங்கள், 18 படகுகள் மற்றும் 32 ஆளில்லா விமானங்களை மீட்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது.

    விபத்து குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், "மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க, மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    • சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
    • தீ விபத்துகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் பழுதடைந்ததே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

    சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கதவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்தில், மொத்தம் 16 பேர்உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனாவின் அவசரகால மேலாண்மை மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிர்வாக அமைச்சகம், சம்பவம் குறித்து விசாரணை நடத்த பணிக்குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

    விபத்து விசாரணையில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிபுணர்களும் அனுப்பப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்கள் பழுதடைந்ததே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

    அடுத்த மாதத்தில் நான்ஜிங் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
    • கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை.

    சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெண்கள் பிரசவகால விடுப்பு தவிர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஜிங்சு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

    அதோடு நிற்காமல் நேர்முக தேர்வுகளின் போது பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அப்போது பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    அதோடு நிற்காமல் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பற்றியும் கேள்விகள் கேட்கப்ப டுகின்றன. ஏற்கனவே குழந்தைகள் பிறந்து இருந்தால் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. இது குறித்து ஆன்லைன் மூலம் அரசு கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றனர்.

    அப்போது 16 நிறுவனங்களில் சட்டவி ரோதமாக 168 பெண்களுக்கு உடற் பரிசோதனை என்ற பெயரில் கர்ப்ப பரிசோதனை செய்தது கண்டுபி டிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார்.
    • டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரை சேர்ந்தவர் ஜிங் (வயது33). இவர் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டார். இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கினார்.

    அப்போது தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார். காரில் அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளை பிடித்து கொண்டு ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து வெளியே வந்து அலுவலகம் செல்லும் காட்சிகள் டிரோன் கேமரா மூலம் அம்பலமானது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிங் விசாரணை நடத்தினார். அவரது மனைவி அவரது நிறுவன உரிமையாளருடன் தகாத உறவு இருந்ததும், அவர் தன்னை ஏமாற்றுவதையும் ஜிங் கண்டுபிடித்தார். டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    • டேட்டிங் உத்திகளுக்கு தனி கட்டணம் என பல வகையான பேக்கேஜூகளின் வருமானம் ஈட்டி வருகிறாராம்.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், சிலருக்கு பணம் ஈட்டித்தரும் தளமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆலோசனைகள் கூறி ஆண்டுக்கு ரூ.163 கோடி சம்பாதிக்கிறார். ஆனால் இவர் கூறும் ஆலோசனைகள் சர்ச்சையாக உள்ளது.

    அதாவது பணக்கார ஆண்களை திருமணம் செய்வது எப்படி? என்பது குறித்து பெண்களுக்கு இவர் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். க்யூ குவின் என்ற பெயர் கொண்ட இவர், காதல் உறவுகளை கையாள்வது குறித்து சர்ச்சை கருத்துக்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

    திருமணம் செய்வதை கோட்டைக்குள் செல்வது என்றும், பணத்தை அரிசி என்றும், கர்ப்பத்தை பந்தை சுமப்பது என்றும் குறிப்பிடும் இவர், உறவுகளை மதிப்பதில்லை. ஆனாலும் இவரை கலந்து ஆலோசிக்க பெண்களிடம் குறிப்பிட்ட தொகையை பெறுகிறார். ரூ.12,945, ரூ.43,179, கவுன்சிலிங் பேக்கேஜூகளுக்கு மாதம் ரூ.1.17 லட்சம், டேட்டிங் உத்திகளுக்கு தனி கட்டணம் என பல வகையான பேக்கேஜூகளின் வருமானம் ஈட்டி வருகிறாராம்.

    அந்த வகையில் ஆண்டுக்கு தோராயமாக 142 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.163 கோடி) சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ள நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • முதல் மூன்று நிலைகளை சாதாரணமாக கடந்த சென்றது.
    • 4-வது நிலையில் குறித்த இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    சீனாவின் ஐஸ்பேஸ் (iSpace) என்ற தனியார் நிறுவனம் ஹைபர்போலா-1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. உயர் திட எரிபொருள் மூலம் இயங்கக் கூடியது. இந்த ராக்கெட் இன்று உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு செயற்கைக்கோள் மற்றும் நிலநடுக்கம் முன்னறிவிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

    முதல் மூன்று நிலைகளை வெற்றிகரமாக ராக்கெட் கடந்தது. ஆனால் நான்காவது கட்டத்தில் இலக்கு நோக்கி செல்லவில்லை. பின்னர் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியடைந்ததாக ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததால் மூன்று செயற்கைக்கோள்களும் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட முடியாமல் போனதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக ஐஸ்பேஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய தனியார் நிறுவுனம் என்ற பெருமையை பெற்றது. அதன்பின் தொடர்ந்து மூன்று முறை ராக்கெட் செலுத்திய முயற்சியில் தோல்வியை சந்தித்தது.

    • தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    சீனாவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.

    விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் ஜியாஜியா அழத் தொடங்கினாள்.

    இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து, இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்பியவுடன் நீ டிவி பார்க்க மீண்டும் தொடங்கலாம் என்று கூறி உள்ளார்.

    ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தார். பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    இந்த வீடியோ ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியா தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும் அவர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    ×