search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    விமானத்தில் மோதிக்கொண்ட பயணிகள்- சரமாரியாக அடித்து உதைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்
    X

    விமானத்தில் மோதிக்கொண்ட பயணிகள்- சரமாரியாக அடித்து உதைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்

    • நடுவானில் விமானத்தில் நடந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • விமானத்தில் நடந்த சண்டையை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.

    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.

    விமானம் பறக்க தொடங்கியதும் அதில் இருந்த 2 பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்த பயணிகள் சமரசம் செய்து வைக்க முயன்றனர்.

    ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் மாறிமாறி ஆவேசமாக பேசினர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நடுவானில் விமானத்தில் நடந்த இச்சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சண்டையை நிறுத்த விமான பணிபெண்களும் முயற்சி மேற்கொண்டனர். பின்னர் கூடுதல் ஊழியர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமரசம் செய்து வேறுவேறு இருக்கைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விமானத்தில் நடந்த இச்சண்டையை பயணிகள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×