என் மலர்

    உக்ரைன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் இடிந்தது.
    • சபோரிஜுயாவில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷிய படைகள் டிரோன் தாக்குதலை நடத்தியது.

    தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் இடிந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். அதேபோல் ரிஷிசிவ் நகரில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர்.

    சபோரிஜுயாவில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கிடையே தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட 21 டிரோன்களில் 16-யை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்தது. ரஷியா சென்றிருந்த சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷியா அதிபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்தது.
    • ரஷிய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

    இதற்கிடையே, போர்க் குற்றம் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டைக் கடந்துள்ளது.
    • ராணுவ உதவிகள் வழங்கிய பின்லாந்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

    உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் தங்களுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனுக்கு பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்று உரையாடினார்.

    ஓராண்டு கால போரில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்லாந்திற்கு நன்றி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் 7 மணி நேரம் அலை அலையாக ஏவுகணைகளை வீசியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கீவ்:

    உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்திய ரஷியா, கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை கைப்பற்றியதுடன், தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதேசமயம், ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குகின்றன.

    இந்நிலையில், உக்ரைனில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் அலை அலையாக ஏவுகணைகளை வீசியதில், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 

    லிவிவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏவுகணை தாக்கியதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் 5 பேரும், தினிப்ரோ பிராந்தியத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆக்கிரமிப்பாளர்களால் பொதுமக்களை மட்டுமே அச்சுறுத்த முடியும், அவ்வளவுதான் அவர்களால் முடியும். ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்களுக்கு உதவாது' என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.
    • டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குகிறது.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.

    ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.

    ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையம் மற்றும் உக்ரேனிய மின் அமைப்புக்கு இடையேயான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், போரை தொடர்ந்து உக்ரைனில் உள்ள ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்கு மாற்றாக, தற்போது டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குவதாகவும் அந்நாட்டின் அணுசக்தி ஆபரேட்டர் ஒருவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த சூழ்நிலையும் இல்லை.
    • மேற்கத்திய போர் விமானங்கள் வழங்குவது உக்ரைன் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறோம்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

    உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமெரிக்கா எங்களுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது முழு உலகிற்கும் ஒரு முக்கியமான செய்தியாகும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அமெரிக்கா நம்புகிறது. எங்களுக்கு எப்-16 போர் விமானங்கள் கண்டிப்பாக தேவை. இந்த போர் விமானங்கள்தான் ரஷியாவுக்கு எதிரான உக்ரைன் வெற்றியை தீர்மானிக்கும். உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் முறையிட்டு இருக்கிறோம். அது செயல்படுத்தப்படும் என்று அவர் என்னிடம் கூறினார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்த விவாதத்தின் போது, தற்போது போர் விமானங்கள் தேவையில்லை என்று ஜோ பைடனும், அவரது உதவியாளர்களும் கூறினர். அப்போது எங்களுக்கு அந்த போர் விமானங்கள் தேவை என்று கூறினேன்.

    மேற்கத்திய போர் விமானங்கள் வழங்குவது உக்ரைன் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறோம். இதனால் எங்களுக்கு போர் விமானங்கள் அவசரமாக தேவை.

    ரஷிய அதிபர் புதினை நம்ப முடியாது என்பதால் அவரை சந்திக்கமாட்டேன். ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த சூழ்நிலையும் இல்லை. ஏனென்றால் புதின் அவரது வார்த்தையை கடைபிடிக்கவில்லை. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    எங்கள் நாட்டில் இருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும். அதன்பிறகே தூதரக ரீதியாக பேச்சில் சேர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர்.
    • ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

    உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    ஆனால், இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைனின் அணு ஆயுத பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடக்கிறது என கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது உக்ரைனின் கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றிய பின்னர், மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷியா வைத்திருந்து உள்ளது.

    அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்று கெர்சனில் 20 சித்ரவதை அறைகள் காணப்பட்டு உள்ளன.

    ரஷிய படைகள் இவற்றை நிறுவி, நிர்வாகம் செய்து, முகாம்களை அமைக்க நிதியுதவியும் செய்த விவரங்கள் இங்கிலாந்து வழக்கறிஞர் வெய்னே ஜோர்டாஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

    இதன்படி, உயிர் தப்பிய ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மேற்கூறிய பல விவரங்கள் தெரிய வந்து உள்ளன. உக்ரைனில் சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், அடித்து, துன்புறுத்தியும், மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி ஏற்படுத்தும் பல கொடுமைகள் நடந்து உள்ளன.

    ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, அவற்றை உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர். இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்து விட்டனரா? அல்லது ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனரா? என்பதும் தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதலால் அந்த கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது.

    இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. பெண் ஒருவரின் உடலை உக்ரைனின் அவசரகால குழுவினர் மீட்டனர். இந்த ஏவுகணை வீச்சில் குழந்தை ஒன்றும் உயிரிழந்து உள்ளது. ரஷியாவை சேர்ந்த எஸ்-300 ரக ஏவுகணை, அந்த கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைனின் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எங்களது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு அந்த பயங்கரவாத நாடு விரும்புகிறது என ரஷியாவை குறிப்பிட்டார்.

    ஆனால், எங்களது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் நாங்கள் ஓட ஓட விரட்டுவோம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கும் அவர்களே முழு அளவில் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது.
    • பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது.

    இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது.

    டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. அதை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் சண்டையிட்டு வருகிறது.

    பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது.

    இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பல மாத சண்டைக்கு பிறகு பக்முத் நகரம், ரஷியா வசம் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக ரஷியாவின் வாக்னர் தலைவர் கூறும்போது, பக்முத் நகர் கிட்டத்தட்ட முழுமையாக ரஷியா படைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு ஒரு சாலை மட்டுமே உக்ரைன் ராணுவத்துக்காக திறந்து இருக்கிறது என்றார்.

    ரஷிய படைகளை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் பக்முத் நகரம் ரஷிய படையிடம் விழும் விளிம்பில் உள்ளது.

    தொழில் வளமிக்க டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் முழுமையாக ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் வசம் சில பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீப காலமாக போரில் பின்னடைவை சந்தித்து வந்த ரஷியாவுக்கு பக்முத் நகரை கைப்பற்றுவது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
    • உக்ரைனை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது.

    பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் ரஷியா தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. உக்ரைனை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய அதிபர் புதின் கொல்லப்படுவார் என்ற பரபரப்பான தகவலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உக்ரைன் போர் காரணமாக புதின் மீது அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

    பதவியில் இருக்கும் போது அவருக்கு ஒரு பலவீனமான காலம் வரும். இந்த தருணத்தின் போது புதினுக்கு நெருக்கமானவர்களால் அவர் கொல்லப்படலாம். இது நிச்சயம் நடக்கும். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது பற்றி தெரியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஜெலன்ஸ்கி கருத்துக்கு அரசியல் நோக்கர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். புதின் தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்து உள்ளார். இதனால் ஜெலன்ஸ்கி சொல்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கூறி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைனில் ரஷியா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
    • போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டைக் கடந்துள்ளது. ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்தடன் போரிட்டு வருகின்றனர்.

    இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. சபையிலும் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷியா உடனான போரில் உயிரிழந்த உக்ரைனிய வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார்.

    புனித சோஃபியா சதுக்கத்தில் குழுமியிருந்த உக்ரைனிய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, போராடும் உக்ரைனிய வீரர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print