search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
    • தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளின் முன்னிலையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்டவராகவும், தங்களுடைய ரோல் மாடலாகவும் ஒவ்வொரு பிள்ளைகளும் தந்தையை பார்க்கிறார்கள். குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் சிறப்பான தந்தையாக விளங்க பின்பற்ற வேண்டிய அடிப்படை குணங்கள் இவை..

    நிபந்தனை இல்லாத அன்பு: தந்தை தன் பிள்ளைகளிடம் காண்பிக்கும் அன்பும், பாசமும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாததாகவும், நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியும்படி அமைய வேண்டும். பிள்ளைகள் பாதுகாப்பாக, சுதந்திரமாக வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் செய்யும் சின்ன சின்னச் செயல்களையும் மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும். இவை சிறந்த தந்தைக்கான அடையாளங்களாக அமையும்.


    பொறுமை: ஒவ்வொரு தந்தைக்கும் நிச்சயம் இருக்க வேண்டிய குணம் பொறுமை. குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமை மிக அவசியம். அவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு சட்டென்று கோபத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது. அது தந்தை மீதான அவர்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். தந்தையிடம் பேசுவதற்கு பயமும், அச்ச உணர்வும் மேலோங்கக்கூடும். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமங்களை எதிர்கொள்வதற்கு தந்தை தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு பொறுமை மிக அவசியம்.

    ஊக்கம்: சிறந்த தந்தையானவர் பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களையும் நேரடியாக கண்காணித்து ஊக்கம் அளித்துக்கொண்டே இருப்பார். படிப்பிலோ, விளையாட்டிலோ சிறந்து விளங்கும்போது வாழ்த்து கூறி உற்சாகப்படுத்த வேண்டும். உடனுக்குடன் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்து பாராட்ட வேண்டும். ஒருவேளை பிள்ளைகள் தோல்வியை தழுவினால் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அடுத்த செயலை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

    நம்பகத்தன்மை: நெருக்கடியான சூழலோ, மகிழ்ச்சியான தருணமோ எத்தகைய நிலையிலும் தந்தை தனக்கு பக்கபலமாக இருப்பார் என்ற நம்பகத்தன்மையை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும். அதற்கேற்ப தந்தையின் செயல்பாடு அமைந்திருக்க வேண்டும். குழந்தையின் தேவை அறிந்து தக்க சமயத்தில் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும் நபராகவும் விளங்க வேண்டும். அது தந்தை மீது பிள்ளைகள் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.


    முன்மாதிரி: தந்தையானவர் தன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும். நேர்மையுடன் செயல்பட வேண்டும். இரக்க குணம் படைத்தவராகவும், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். அதனை பார்த்து பிள்ளைகளும் நல்ல குணாதிசயம் கொண்டவர்களாக வளர்வார்கள்.

    கேட்கும் திறன்: சிறந்த தந்தைக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணாதிசயங்களுள் ஒன்று பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்பது. அவர்களின் உணர்வுகள், யோசனைகள், சிந்தனைகள், கவலைகள் என ஒவ்வொரு நிலைப்பாட்டையும் கண்காணித்து அவர்களை வழிநடத்த வேண்டும். எந்த நேரத்தில் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்து ஆதரவு அளிக்க வேண்டும்.

    பங்கேற்பு: குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவரே சிறந்த தந்தையாக இருக்க முடியும். பள்ளிகளில் குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுவது, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் தவறாமல் கலந்து கொள்வது என பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அது தந்தையுடனான பந்தத்தை வலுப்படுத்தும்.

    ஒழுக்கம்: சிறந்த தந்தை ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அவரின் நடத்தையிலும், செயலிலும் அது வெளிப்பட வேண்டும். தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளின் முன்னிலையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    • பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

    பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும்.

    எல்லா குழந்தைகளும் விளையாட்டுத்தனமாகதான் இருக்கும், எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக்கொண்டே ஊட்ட முயற்சிப்பது மிக சிறந்த வழியாகும். குறைந்தது 1 மணி நேரமாவது உணவு தர செலவிடவேண்டும்.

    எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து, அவர்களுடன் குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்றாலும், விடாமுயற்சியால் அவற்றை இலகுவாக்க முயற்சிக்கவேண்டும்.


    தற்போது உணவிலும் ரசாயன கலவை இருப்பதால், எதிர்பார்க்கும் அளவிற்கு ஊட்டச்சத்துள்ள பொருட்கள் நமக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எவ்வகையான உணவு கொடுக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

    வால்நட் பொதுவாக குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கும்.சில முக்கியமான உணவுகள் மூளையின் போதுமான வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வகையான உணவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள். யதேர்ச்சையாக மூளையைப் போன்றே தோற்றமளிக்கும் வால்நட் மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாக உள்ளது. நுங்கு சாப்பிடுவது மார்பகத்திற்கு நல்லது என்ற சித்த மருத்துவர் கருத்து மாதிரி இல்லை இது. பல முன்னணி ஆங்கில இதழ்களில் வெளியான தகவல்தான் வால்நட்டின் நன்மைகள். வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.

    பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், இரவில் கொடுக்கக்கூடாது இரவில் கொடுப்பது செரிமான கோளாறு ஏற்படலாம்.தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும்,அதிக அளவு வயிற்றுப்போக்கு உண்டாக்கும்.

    முட்டை இதில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது,தினமும் ஒரு 1 வேகவைத்த முட்டையை கொடுங்கள், 1 அல்லது 2 முட்டை கொடுக்கலாம், குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும்,மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்


    மீன் வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பர் நிறைந்துள்ளன, எனவே இது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் நினைவக சக்தியை அதிகரிக்கிறது.எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம்,ஆனால் முள் அதிக அளவு உள்ள மீனை கட்லெட்,புட்டு போன்ற ஸ்னாக்ஸ் முறையில் கொடுத்தால்,குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம், இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

    பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது,அதில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன, இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது,பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன.
    • நீர்சத்துள்ள உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

    வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள்:

    உங்கள் குழந்தையின் தட்டில் ஒரு வானவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் கீரைகள் இயற்கையில் சத்துக்கள் நிறைந்தவை. இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளன.

    புரதங்கள்:

    கோழி, ஒல்லியான இறைச்சிகள், மீன் மற்றும் பருப்பு வகைகளை உங்களில் குழந்தைகளின் உணவில் இணைக்கவும். இவை நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்கும்.

    புரோபயாடிக்குகள்:

    தயிர் மற்றும் புளித்த உணவுகளில் காணப்படும் புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன. இது வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அம்சமாகும்.

    முழு தானியங்கள்:

    முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை நீடித்த ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.


    நட்ஸ் வகைகள்:

    நட்ஸ் மற்றும் விதைகளில் துத்தநாகம், செலினியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    திரவங்கள்:

    போதுமான நீரேற்றம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. தண்ணீர், மூலிகை தேநீர் மற்றும் நீர்த்த பழச்சாறுகளை வழங்குங்கள்.

    மழைக்காலத்தில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுவகைகளை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம்.

    • தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
    • குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

    பல்வேறு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வகையில், மழை பெய்து வருகிறது. என்னதான் மழை வெப்பத்தில் இருந்து நமக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், மழைக்காலத்தில் வைரஸ் மற்றும் நோய் தொற்றுக்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

    எனவே, வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய்கள் அவர்களை எளிதில் பாதிக்கலாம். இந்த பருவத்தில் சிறிய குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    அதேசமயம், மழைக்காலத்தில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியம். அதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான வைரஸ் தொற்றுகளால் பாதிக்கலாம்.

    எனவே, மழைக்காலங்களில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    எப்படி பராமரிப்பது?

    * உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், குழந்தைக்கு முடிந்தவரை முழு உணவாக தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். தாயின் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டால், ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    * மழைக்காலங்களில் தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வெளியில் இருந்து வந்த பிறகு உங்கள் கைகளை கழுவ முயற்சிக்கவும். அதற்கு பின்னர் உங்கள் குழந்தைகளைத் தொடவும்.

    * கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க முழு கை ஆடைகளையும் அணிய வேண்டும்.

    * பருவமழை காலத்தில் அனைத்து இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். கூட்ட நெரிசலான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

    * அதேசமயம், புல் அதிகம் வளரும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் கொசுக்கடி பயம் இருக்கும்.

    * மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படுவார்கள். எனவே, குழந்தையை எப்போதும் உலர்வாக வைக்க முயற்சி செய்யுங்கள். வலுவான சூரிய ஒளியில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்தவும்.

    * சூரிய ஒளி குறைவாக இருந்தால், குழந்தையை ஆடை அணிவதற்கு முன் லேசாக அயர்ன் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆடைகளில் உள்ள ஈரப்பதம் நீங்கும். குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவும். ஒரே டயப்பரை நீண்ட நேரம் அணிவதால் குழந்தைக்கு தொற்று மற்றும் சளி கூட ஏற்படலாம்.

    • பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும்.
    • குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.

    தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் பேத்தாலஜிஸ்ட் டாக்டர் நித்யா மாலைமலர்.காமிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நிறைய பெற்றோர்களுக்கு நமது குழந்தை எப்போது பேசும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் பேசிவிடுவார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது.

    குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது என்றால் அதற்கு என்ன காரணம்?

    பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும். எடுத்துக்காட்டாக அப்பாவே, அம்மாவே தனது குழந்தை பருவத்தில் தாமதமாக பேசி இருக்கலாம். அதனால் குழந்தையும் தாமதமாக பேசுவாங்க.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று இருந்தது, அதனால் குழந்தைகளுக்கு பேசுவது, புரிந்து கொள்வது போன்ற பிரச்சனையாக இல்லை. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அம்மா, அப்பா, குழந்தை என்று குறுகிய வட்டத்தில் வளர்வதால் குழந்தைகளிடம் அந்த புரிதல் என்பது இல்லாமல் இருக்கிறது. இப்போது உள்ள குழந்தைகள் அதிகப்படியாக தனிமையிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களுடன் பேசி விளையாட தாத்தா, பாட்டி, அப்பா என ஆட்கள் இல்லை இதுவும் பேசுவதில் தாமதத்திற்கு காரணமாக உள்ளது.

    மேலும் குழந்தைகளுக்கு மொழி ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நாம் வீட்டில் தமிழ் மொழியில் பேசுகிறோம். ஆனால் போன் மூலம் ஆங்கிலத்தில் குழந்தைகளுக்காக பாடல்கள் வைக்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.

    போன் மூலம் பாடல்கள், கதைகள் போன்றவற்றை அறிவதால், முகம் பார்த்து பேசுதல் என்பது இல்லாமல் போய்விடுகிறது. 2 வயதிலேயே குழந்தைகள் போன்களின் மூலம் பாடல், படிப்பு என கற்றுக் கொள்கிறார்கள். ஒரு சமயம் இந்த போன் சாதகமாக இருந்தாலும், 100 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்கு மரபணு பிரச்சனை இருக்கும் போது போன் பார்ப்பதால் பேசுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.


    ஒரு குழந்தை எந்த வயதில் இருந்து பேச தொடங்கும்? எந்த வயதில் இருந்து நல்லா பேச தொடங்கும்? இல்ல பேசுவதில் தாமதம் என்று நாம் எப்படி கண்டுபிடிப்பது?

    ஒரு குழந்தை பிறந்தவுடனேயே பேச தொடங்கிவிடும். பசி என்றால் அழுதால் அதுவும் பேசுவதற்கு முதல் நிலை ஆகும்.

    ஒரு வயதில் குழந்தை அம்மா, அப்பா என்று ஆரம்பிக்கும்.. படிப்டபடியாக 2 வயதில் 2 வார்த்தைகைள் பேசும். 3 மூன்று வார்த்தைகள் பேசும்.

    மூன்று வயது ஆன பிறகும் குழந்தைகள் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேச வில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

    குழந்தைகள் பேசுவதற்கு எவ்வளவு நாள் காத்திருக்கலாம்?

    நாங்கள் தனி குடும்பமாகதான் இருக்கிறோம். இருவரும் வேலை செல்கிறோம் வேலைக்கு ஆட்கள் வைத்து பார்க்கிறோம் என்றால், அந்த குழந்தையுடன் தொடர்பில் இருப்பவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். நம் குழந்தை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

    காத்திருக்கும் நாள் என்பது அதிக பட்சமாக 3 முதல் 6 மாதமாக இருக்கலாம். 2 அல்லது 3 வயது ஆகியும் குழந்தை பேசவில்லை என்றால் பேச்சு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சென்று பார்ப்பது நல்லது. மருத்துவர்களிடம் இது வெறும் பேச்சு தாமதம் மட்டுமா? அல்லது குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கா என்று கேட்டு அறிந்த கொள்ளலாம்.

    இந்த இடைப்பட்ட காலத்தில் போன் உபயோகிப்பதை நிறுத்திக் கொள்வதும் நல்லது. நீங்கள் மருத்துவரை அணுகும் போது குழந்தைகளுக்கு ஆர்டிசமோ, எடிஎச்டியோ இருக்கலாம் என்று சொன்னால் இன்னும் அதிக கண்காணிப்பு கொடுக்க வேண்டி வரும்.

    குழந்தைகள் பேசுவதில் தாமதம் என்றால் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும்? குழந்தை நல மருத்துவரா? அல்லது ஒரு தெரபிஸ்டை போய் பார்க்கணுமா?

    நீங்கள் குழந்தை நல மருத்துவரையும் பார்க்கலாம். ஸ்பீச் தெரபிஸ்ட்டையும் போய் பார்க்கலாம். இரண்டு பேரும் உங்களை வழி நடத்துவார்கள்.

    தெரபிஸ்டை போய் பார்க்கும் போது எந்த மாதிரியான நடைமுறைகள் இருக்கும்?

    முதலில் பெற்றோர் சார்ந்த கேள்விகள் இருக்கும். குழந்தைகளின் புரிதல் திறன், பேசும் திறன் எப்படி இருக்கு என்று பார்ப்போம். 3 வயது குழந்தைக்கு 1 வயதிற்கான புரிதல் திறன் தான் இருக்கு, பேசும் திறன் 8 மாதத்திற்கு தான் இருக்கு என்றால் அந்த குழந்தையால் ஏன் அடுத்தவர்களை பார்த்து கற்று கொள்ள முடியவில்லை என்று பார்ப்போம்.


    யார் யாரெல்லாம் தெரபிஸ்ட்டை பார்க்கலாம்? குழந்தைகள் மட்டுமா? அல்லது பெரியவர்களும் பார்க்கலாமா?

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்பீச் தெரபிஸ்ட்டை பார்க்கலாம். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள், மென்று சாப்பிட முடியாத குழந்தைகள், திக்கி பேசும் குழந்தைகள், உச்சரிப்பு குறைப்பாடு உள்ள குழந்தைகள், டீன் ஏஜ் இருந்து அடல்ட் ஏஜ் வரும், குரலில் மாறுபாடு இருக்கும் குழந்தைகள், உதாரணமாக ஆண் குரல் பெண் போலவும், பெண் குரல் ஆண் போலும் இருக்கும் அது போல் உள்ள குழந்தைகள், விபத்தால் குரல் திறன் இழந்தவர்கள், பக்கவாதம் வந்து குரல் இழந்தவர்கள் என மேற்கண்ட அனைவரும் ஸ்பீச் தெரபிஸ்டை பார்க்க வேண்டும்.

    பேச்சு தாமதத்திற்கும் ஆர்டிசத்திற்கு தொடர்பு இருக்கா?

    ஒரு குழந்தைக்கு வேறும் பேச்சு தாமதம் மட்டும் தான் இருக்கு என்றால் அந்த குழந்தைக்கு புரிதல் திறன் நன்றாக இருக்கும். நம் கண் பார்த்து பேசுவாங்க, நம்ம என்ன சொன்னாலும் செய்வார்கள்.

    ஆனால் ஆர்டிசம் என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளடக்கி உள்ளது. பேச்சு தாமதம் இருக்கும், புரிதல் திறன் குறைவாக இருக்கும், செய்ததையே திரும்ப திரும்ப செய்வார்கள் இதெல்லாம் ஆர்டிசத்துடன் தொடர்புடையது. ஆர்டிசத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் இருக்கும். ஆனால் பேச்சுதாமதம் இருக்கும் குழந்தைகளுக்கு ஆர்டிசம் இருக்காது.

    திக்கு வாய் உள்ள குழந்தைகளை தெரபி மூலம் சரிசெய்ய முடியுமா?

    திக்கு வாய் என்பது ஒரு நோய் கிடையாது. திக்கு வாய் என்பது ஒரு குறைபாடு சம்பந்தப்பட்ட விஷயம். இதற்க பல்வேறு பயிற்சி மூலம் இதை சரிசெய்ய முடியும். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு உள்ளது. இதற்கு 3 மாதம் தெரபி எடுத்தாலே சரி செய்து விடலாம்.

    ஆண்ணிற்கு ஒரு பெண்ணின் குரல் இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது அதை சரிசெய்ய முடியுமா?

    இந்த குரல் மாற்றம் என்பது ஹார்மோன்ஸ் சம்பந்தபட்ட விஷயம். இதை சரிசெய்ய முடியும், இதற்கு முறையான தெரபிகள் மற்றும் பயிற்சிகள் உள்ளது. நிறைய பேருக்கு 3 அமர்வுகளில் சரியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு 10 அமர்வுகளில் சரியாகி உள்ளது. ஆண்களுக்கு விரைவில் குணப்படுத்தலாம் ஆனால் பெண்களுக்கு கால தாமதமாகும்.

    குழந்தைகள் போன் பயன்படுத்தலாம் ஆனா அது அளவு இருக்கனும்னு சொன்னீங்க.. எந்த அளவு என்று சொல்லுங்கள்...

    உலக சுகாதாரத்துறை கருத்துப்படி, 0-2 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சமாக போன் காண்பிக்க கூடாது என்றும் அந்த வயது குழந்தைகளில் மூலை நன்கு வளர்ச்சியடையும் காலம். அந்த நேரத்தில் போன்களை பார்க்கும் போது அவர்களது உலகம் அந்த போனிலேயே முடிந்து விடும்.

    ஆனால் 2 வயது மேல் போன் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 1மணி நேரம் கொடுக்கலாம். குழந்தைகள் போன் உபயோகிக்கும் போது கண்டிப்பாக பெற்றோர்கள் அருகில் இருக்க வேண்டும்.


    பேச்சு தாமதம் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

    குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிட வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை அந்த வயதுடைய குழந்தைகளுடன் பழக செய்ய வேண்டும்.

    குழந்தைகள் துரு துரு என்று இருந்ததால் என்ன பண்ணனும்?

    குழந்தை என்றால் துரு துருனு தான் இருக்கும். ஆனால் ரொம் துரு துருனு இருந்தால் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். குழந்தை துருதுருனு இருக்கு ஆனா நல்ல பேசுது, விளையாடுது, புரிஞ்சுக்குது என்றால் நீங்கள் பயப்படவே தேவையில்லை.

    இவ்வாறு டாக்டர் நித்யா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    • பிறருடைய உணர்வுகளை மதிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    • குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    மழலை பருவத்தின்போதே குழந்தைகளிடம் சின்ன சின்ன வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொடுத்துவிட வேண்டும். அவற்றை அவர்கள் பின்பற்றுவதற்கும் பெற்றோர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படி ஆரம்பக்கட்டத்திலேயே கற்றுக்கொடுக்க வேண்டிய அடிப்படை வாழ்வியல் பாடங்கள் இவை..

    முழு கவனத்துடன் கேட்கும் கலை

    மற்றவர்கள் பேசும்போது அதை கவனமாகக் கேட்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பேசுபவர்களின் கண்களை பார்த்தபடி கேட்பது, அவர்களின் பேச்சில் குறுக்கிடாமல் இருப்பது, அவர்கள் பேசும் விஷயத்தை மனதில் பதியவைப்பது போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அதன்படி செயல்படுகிறார்களா? என்பதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். அப்படி முழு கவனத்துடன் கேட்கும் கலையை வளர்த்துக்கொள்வது பிறருக்கு மரியாதை கொடுப்பதற்கும், தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்வதற்கும் வழிவகுக்கும்.

    மதிக்கும் பண்பு

    பெற்றோர்கள், ஆசிரியர்கள், மூத்தவர்கள், அதிகாரிகள் போன்றவர்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அதனை பின்பற்றுவது, பிறருக்கு உரிய மரியாதையை கொடுக்கும் பண்பை குழந்தை பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வழிகாட்டும்.

    அட்டவணை

    அன்றாடம் செய்யும் விஷயங்களை முறையாக மேற்கொள்வதற்கு அட்டவணை தயாரிக்கவும், திட்டமிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். சாப்பிடும் நேரம், வீட்டுப்பாடம் செய்யும் நேரம், விளையாடும் நேரம், தூங்கும் நேரம் என எல்லாவற்றையும் அட்டவணைப்படுத்தி அதன்படி அவர்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறை, ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் வளர்க்க உதவும்

    நாகரிகமான சொற்கள்

    சிறு வயதில் இருந்தே, 'தயவுசெய்து', 'நன்றி', 'தவறு செய்திருந்தால் என்னை மன்னிக்கவும்' போன்ற நாகரிகமான சொற்களை உபயோகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவை பிறரிடத்தில் மரியாதைக்குரிய தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.

    பொறுப்பு ஏற்பது

    குழந்தைகள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு தாங்களே முழு பொறுப்பையும் ஏற்க கற்றுக்கொடுக்க வேண்டும். சந்திக்கும் எதிர் விளைவுகளை புரிந்துகொண்டு செயல்படுவதற்கும், தவறுகளை திருத்திக்கொள்வதற்கும், தீர்க்கமாக முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் வித்திடும்.

    மற்றவர்களுக்கு உதவுவது

    பெற்றோருக்கு வீட்டு வேலைகளில் உதவுவது, வகுப்புத் தோழர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது, கருணை காட்டுவது என உதவும் பண்பை கற்றுக்கொடுக்க வேண்டும். அக்கறை மனப்பான்மையை வளத்துக்கொள்வதற்கு இந்த நடத்தைகள் உதவும்.

    சுயக்கட்டுப்பாடு

    குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பொறுமையுடன் காத்திருப்பது, விரக்தியை சுமுகமாக கையாள்வது, சுய ஒழுக்ககத்தை பின்பற்றுவது என சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவதற்கு வழிகாட்டும்.

    நேர்மையை கடைப்பிடித்தல்

    எந்தவொரு சூழலிலும் நேர்மையாக செயல்பட சொல்லிக்கொடுக்க வேண்டும். அது உண்மையை சொல்லவும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும் வழிவகை செய்யும்.

    பின்பற்றுதல்

    பெற்றோர் சொல்லும் வேலைகள், அறிவுறுத்தல்களை உடனடியாக பின்பற்றுவதற்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த பழக்கம் பணிகளை உடனடியாக முடிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவும். கொடுத்த வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் நபர் என்ற நம்பகத்தன்மையை பிறர் மத்தியில் ஏற்படுத்தவும் செய்யும்.

    பிறர் உணர்வுகளை மதிப்பது

    பிறருடைய உணர்வுகளை மதிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் மனக்குமுறல்களை அனுமதியாக கேட்கவும், உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளவும் வழிவகை செய்யும்.

    • மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பழமையான பயிற்சியாகும்.
    • யோகா குழந்தைகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தை பருவத்தில் இருந்தே படிப்புச்சுமை குழந்தைகளின் தோள்களில் விழுகிறது. பல குழந்தைகள் சிறுவயதிலிருந்தே படிப்பு தொடர்பான மன அழுத்தத்தை எடுக்கத் தொடங்குகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை மன அழுத்தத்தை உணராமல் மகிழ்ச்சியாக இருக்க, வேடிக்கையான செயல்களில் மும்முரமாக வைத்திருப்பது அவசியம். குழந்தைகளும் குழந்தை பருவத்தில் இருந்தே யோகா செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் யோகாவின் சக்தியை அறிந்து, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பழமையான பயிற்சியாகும். யோகா குழந்தைகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    தடாசனம்

    யோகா பயிற்சி குழந்தைகளின் தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும் இது குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கிறது. தடாசனா பயிற்சி குழந்தைகளுக்கு நன்மை பயக்கும். இது உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.

    இந்த ஆசனத்தில், குழந்தைகள் நேராக நின்று தங்கள் கால்களை ஒன்றாக இணைத்து கைகளை மேலே உயர்த்துகிறார்கள். இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதால் முதுகுத்தண்டு வலுவடைந்து உடல் சமநிலை மேம்படும். இதனுடன், இந்த ஆசனத்தின் பயிற்சியும் செறிவு அதிகரிக்கிறது.

    விருக்ஷாசனம்

    குழந்தைகள் விருக்ஷாசனம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். குழந்தைகளுக்கு யோகா கற்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஆசனங்களை வேடிக்கையாக செய்ய வேண்டும். விருக்ஷாசனம் என்பது குழந்தைகளுக்கான ஒரு வேடிக்கையான ஆசனமாகும்.

    அதில் அவர்கள் ஒரு காலில் நின்று, மற்றொரு காலை முழங்காலில் வைத்து, நமஸ்காரம் தோரணையில் கைகளை இணைக்கிறார்கள். இந்த ஆசனத்தை பயிற்சி செய்வது சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் கால் தசைகளை பலப்படுத்துகிறது.

    வீரபத்ராசனம்

    யோகா பயிற்சி செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பது மட்டுமின்றி மன அமைதியும், கவனமும் அதிகரிக்கும். வீரபத்ராசனம் பயிற்சி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை வீட்டில் குழந்தைகளுக்கு எளிதாக கற்பிக்க முடியும். இதற்காக, முதலில் குழந்தையின் ஒரு காலை முன்னோக்கி நீட்டி, மற்றொரு காலை பின்னோக்கி வைத்து, பின்னர் குழந்தையின் கைகளை மேல்நோக்கி உயர்த்தவும்.

    இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதன் மூலம், குழந்தைகளின் உடலின் கீழ் பகுதி வலுவடைகிறது. இதைப் பயிற்சி செய்வதன் மூலம், குழந்தைகளின் தோரணை மேம்படும் மற்றும் தசைகள் வலுவடையும்.

    மர்ஜாரியாசனம்

    மர்ஜாரியாசனம் குழந்தைகளுக்கு பல உடல் மற்றும் மன நலன்களை வழங்குகின்றன. மர்ஜாரியாசனமும் பிட்டிலாசனமும் குழந்தைகளின் முதுகெலும்பை நெகிழ வைக்கும். இந்த ஆசனங்களின் போது முதுகெலும்பை மேலும் கீழும் நகர்த்துவது நெகிழ்வுத்தன்மையையும் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

    இந்த ஆசனங்களின் வழக்கமான பயிற்சி குழந்தைகளின் உடல் நிலையை மேம்படுத்துகிறது. இது அவர்களின் உட்கார்ந்து, நிற்கும் மற்றும் நடக்கும் நிலையை மேம்படுத்துகிறது. இதில், குழந்தைகள் கை மற்றும் முழங்காலில் வந்து பின் மாறி மாறி முதுகை உயர்த்தி இறக்குகிறார்கள்.

    சேதுபந்தாசனம்

    சேதுபந்தாசனம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல மற்றும் வேடிக்கையான ஆசனம். இது குழந்தைகள் பயிற்சி செய்ய விரும்புவார்கள். இந்த ஆசனத்தில் குழந்தைகள் முதுகில் படுத்து இடுப்பை உயர்த்துவார்கள். சேதுபந்தசனம் முதுகுத்தண்டு மற்றும் முதுகு தசைகளை பலப்படுத்துகிறது, அதன் பயிற்சி குழந்தைகளின் சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. 

    • உங்கள் குழந்தை நன்றாக மதிப்பெண் பெற வேண்டும் அல்லது சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்காதீர்கள்.
    • உங்கள் குழந்தையின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு படிப்பு அட்டவணையை நீங்கள் பின்பற்றலாம்.

    குழந்தைகள் உள்ளார்ந்த ஆர்வத்தையும், கற்றலுக்கான அன்பையும் தடைசெய்வதைத் தவிர்ப்பதற்கு சரியான சமநிலையை அடைவது மிகவும் முக்கியமானது. எதிர்ப்புத் தெரிவிக்காமல் உங்கள் பிள்ளையைப் படிக்க ஊக்குவிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரு குழந்தைக்கு படிப்பதில் ஆர்வம் காட்டுவது எப்படி? உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களுடன் ஒத்துப்போகும் உத்திகளைப் புரிந்துகொண்டு செயல்படுத்துவதன் மூலம், கல்விசார் நோக்கங்களுக்கான உண்மையான மற்றும் நீடித்த உற்சாகத்தை வளர்க்கும் சூழலை நீங்கள் உருவாக்கலாம்.

    உங்கள் குழந்தையுடன் உட்காருங்கள்

    உங்கள் குழந்தை படிக்கத் தூண்டுவதற்கு பெற்றோராக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், அவர் படிக்கும் போது அவருடன் அமர வேண்டும். இருப்பினும், உங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, உங்கள் நிலுவையில் உள்ள அலுவலக வேலையைச் செய்யுங்கள் அல்லது புத்தகத்தைப் படியுங்கள்.

    கற்றலில் அழுத்தம் கொடுக்கவும் மற்றும் தரங்கள் அல்ல

    மதிப்பெண் பெறுவதற்கு நல்ல மதிப்பெண்கள் முக்கியம் என்றாலும், உங்கள் குழந்தை நல்ல மதிப்பெண்களைப் பெறுவதில் சிரமப்பட்டால், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வகுப்பில் அன்றாடம் நடக்கும் செயல்பாடுகள் மற்றும் வகுப்பில் அவர் என்ன கற்றுக்கொண்டார் என்று அவரிடம் கேளுங்கள்.

    உங்கள் குழந்தையின் பக்கத்தில் இருங்கள்

    உங்கள் குழந்தை நன்றாக மதிப்பெண் பெற வேண்டும் அல்லது சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்காதீர்கள். அவருடன் இனிமையாகவும் மென்மையாகவும் இருங்கள், அவருடைய கண்ணோட்டத்தில் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும். குழந்தையை கற்றுக்கொள்ள தூண்டுவது எது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எந்த விதமான எதிர்மறையும் அவனிடமிருந்து ஒரு கிளர்ச்சியை உண்டாக்கக்கூடும், மேலும் இது அவன் மனந்திரும்பவும் உங்களைத் தடுக்கவும் செய்யும்.

    ஆய்வுகள் பற்றி விவாதிக்கவும்

    ஒவ்வொரு நாளும் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றி குழந்தையுடன் பேசுங்கள். அதைப் பற்றி அவரிடம் கேட்டால் வகுப்பில் இன்னும் விழிப்புடன் இருப்பார். அவருக்கு பிடித்த பாடம், பிடித்த வகுப்பு மற்றும் பிடித்த ஆசிரியர் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஒரு ஆய்வு அட்டவணையை உருவாக்கவும்

    முறையான முறையில் பின்பற்றப்படும் மற்றும் செய்யப்படும் எதுவும் எப்போதும் நேர்மறையான விளைவைக் கொடுக்கும், அதுவே படிப்புகளுக்கும் பொருந்தும். ஒரு அட்டவணையை உருவாக்கி அதை கடைபிடிக்கவும். படிப்பிற்கு வீட்டுப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஒவ்வொரு நாளும் வகுப்பில் கற்பிக்கப்படும் கருத்துகள் மற்றும் பாடங்களைத் திருத்துவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    படிப்பதற்கான சூழலை உருவாக்குங்கள்

    உங்கள் பிள்ளை படிக்கும் இடத்திற்கு அருகாமையில் அதிக சத்தம், தொலைக்காட்சி, மற்றொரு உடன்பிறந்தவர் விளையாடுவது போன்ற கவனச்சிதறல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை மிகவும் குறைவான கவனத்தை ஈர்க்கிறது மற்றும் எளிதில் திசைதிருப்பப்படலாம் மற்றும் படிப்பில் ஆர்வத்தை இழக்கலாம்.

    ஆசிரியரிடம் பேசுங்கள்

    உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மோசமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதை அல்லது ஒரு பாடத்தைப் படிக்கத் தயங்குவதை நீங்கள் கவனித்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியரைத் தொடர்புகொள்ளலாம். ஆசிரியரும் பெற்றோரும் சேர்ந்து, அந்த பாடத்தில் குழந்தையின் ஆர்வத்தை வளர்க்க அல்லது தரங்களை மேம்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்கலாம்.

    உங்கள் குழந்தையின் கற்றல் பாணியைப் பின்பற்றவும்

    உங்கள் குழந்தை எப்படிப்பட்ட கற்றல் மற்றும் அது செவிவழி, காட்சி அல்லது இயக்கவியல் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தையின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு படிப்பு அட்டவணையை நீங்கள் பின்பற்றலாம்.

    ஒன்றாக சேர்ந்து படிப்பு இலக்குகளை உருவாக்குங்கள்

    அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அடையக்கூடிய மற்றும் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது நல்லது. உங்கள் குழந்தையுடன் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால படிப்பு இலக்குகளை நீங்கள் உருவாக்கலாம், இதனால் அவர் உத்வேகத்துடன் இருப்பார் மற்றும் அவரது முன்னேற்றத்தைக் கண்காணிக்க முடியும்.

    அவர்களின் கருத்தைக் கேளுங்கள்

    சில சமயங்களில் அவர் தவறாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும், உங்கள் பிள்ளையின் கருத்துக்களைக் கேட்டு மதிப்பது மிகவும் முக்கியம். பல்வேறு விஷயங்களில் உங்கள் குழந்தை தனது கருத்தைக் கூற அனுமதிப்பது அவரது நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது . உங்கள் பிள்ளையின் வாதங்களுக்கும் சரியான காரணத்தைக் கூறச் சொல்லுங்கள்.

    தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுங்கள்

    தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், அது உலகின் முடிவு அல்ல. உங்கள் குழந்தை குறைந்த மதிப்பெண்களைப் பெற்றாலும், அவரைத் திட்டுவதையோ அல்லது அவரது நண்பர்கள் அல்லது சகாக்களுடன் ஒப்பிடுவதையோ தவிர்க்கவும். அவர் ஏற்கனவே மிகவும் தாழ்வாக உணர்கிறார். உங்கள் குழந்தையை ஊக்குவித்து அனுதாபம் காட்டுங்கள், தவறுகளைச் செய்வதும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் சரி என்று அவரிடம் சொல்லுங்கள்.

    உங்கள் குழந்தையை அதிக ஈடுபாடு கொள்ளச் செய்யுங்கள்

    படிக்கும் மேசை, ஸ்டேஷனரி, டேபிள் கவர் அல்லது உங்கள் குழந்தை படிப்போடு தொடர்புபடுத்தும் பல விஷயங்களை வாங்குவதில் உங்கள் பிள்ளையை ஈடுபடுத்துவது நல்ல யோசனையாக இருக்கும். இந்த வழியில் உங்கள் குழந்தை அதிக ஈடுபாடு கொண்டதாக உணர்கிறது, மேலும் இது படிப்பதில் அவருக்கும் ஆர்வத்தைத் தூண்டலாம்.

    உங்கள் குழந்தைக்கு விரிவுரை வழங்குவதைத் தவிர்க்கவும்

    எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும், சிறந்ததைச் செய்யவும் விரும்புகிறார்கள். இது பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதைப் பற்றி விரிவுரை செய்ய வழிவகுக்கும். இதைச் செய்வதைத் தவிர்க்கவும், அதிகப்படியான வாய்மொழித் தாக்குதலானது இறுதியில் ஆர்வமற்ற குழந்தைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தையை திட்டுவது, கையாளுதல் அல்லது அச்சுறுத்துவது போன்றவற்றை விட தெளிவான மற்றும் தெளிவான வழிமுறைகளை கொடுங்கள்.

    அனைத்து சாதனைகளையும் அங்கீகரிக்கவும்

    எல்லோரும் அவ்வப்போது முதுகில் தட்டுவதை விரும்புகிறார்கள், குழந்தைகளும் விரும்புகிறார்கள். உங்கள் குழந்தையின் சிறிய சாதனையை கூட நீங்கள் அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் மிகவும் முக்கியம். இது அவருக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், சிறப்பாகச் செய்ய அவரைத் தூண்டுகிறது.

    படிக்கும் பழக்கம்

    உங்கள் குழந்தைக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். பொதுவாக படிக்கும் குழந்தைகளும் படிப்பதை விரும்புவது வழக்கம். நீங்கள் முன்மாதிரியாக வழிநடத்தலாம் மற்றும் உங்கள் வீட்டில் ஒரு சாதகமான சூழலை உருவாக்கலாம் அல்லது இன்னும் சிறப்பாக நீங்கள் வாசிப்பு அட்டவணையை உருவாக்கலாம்.

    உறுதியாகவும் ஒழுக்கமாகவும் இருங்கள்

    உங்கள் கற்பித்தல் வழிகளில் ஒழுக்கமாகவும் உறுதியாகவும் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் கையாளுதல் மற்றும் கோருதல் என்று அர்த்தம் இல்லை. சரியான சமநிலையை அடைவதற்கான திறவுகோல் வீட்டில் ஒரு நேர்மறையான மற்றும் சாதகமான படிப்பு சூழ்நிலையை உருவாக்குவதாகும்.

    உங்கள் குழந்தைக்கு லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்கவும்

    பாராட்டும் வெகுமதியும் ஒரு குழந்தைக்கு நல்ல படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதில் ஒரு நேர்மறையான அம்சமாகும். இருப்பினும், உங்கள் குழந்தைக்கு லஞ்சம் கொடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இது ஒரு சிக்கலை தற்காலிகமாக தீர்க்கலாம் மற்றும் உங்கள் குழந்தை ஆர்வத்துடன் படிப்பதில் ஆர்வம் காட்டாமல் போகலாம்.

    கதை சொல்ல முயற்சிக்கவும்

    ஆக்கபூர்வமான கதைசொல்லல் மூலம் உங்கள் பிள்ளையின் படிப்பில் ஆர்வத்தை நீங்கள் வளர்க்கலாம் . வாழ்க்கையில் படிப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒழுக்கக் கதைகளை நீங்கள் அவருக்குச் சொல்லலாம்.

    படிப்பு நேரத்தை வேடிக்கையான நேரமாக ஆக்குங்கள்

    குழந்தைகளைத் தண்டித்துவிட்டுப் படிக்கச் சொல்லி பெற்றோர்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். பிள்ளைகள் தங்களுக்குத் தண்டனை கொடுப்பது பெற்றோரின் வழி என்று நினைக்கிறார்கள் . நீங்கள் படிக்கும் நேரத்தை வேடிக்கையான நேரமாக மாற்றி உங்கள் குழந்தைகளை ரசிக்கச் சொல்லலாம். உங்கள் குழந்தையை அறையில் தனியாகப் படிக்க வைப்பதை விட ஒன்றாகப் படிக்க அதிக நேரம் செலவிடுங்கள்.

    உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்

    உங்கள் குழந்தைக்குத் தேவைப்படும் போதெல்லாம் அல்லது அவரது பாடங்களில் எங்காவது சிக்கிக்கொள்ளும் போதெல்லாம் அவருக்கு உதவுங்கள். அவர் தனது சந்தேகத்தைத் தீர்க்க பல முறை கேட்டால் கோபப்பட வேண்டாம். உங்கள் குழந்தையின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பொறுமையாகவும் மென்மையாகவும் இருங்கள்.

    • குழந்தையுடன் சேர்ந்து அந்த பிடிவாத குணமும் வளர்வது நல்லதல்ல.
    • குழந்தை அடம் பிடித்தால் அடுத்த முறை என்றால் அடுத்த முறை தான் என்று குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

    குழந்தை பிடிவாதம் பிடித்தல் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். குறும்பு செய்தல், அடம் பிடித்தல் போன்றவை குழந்தைகளுக்கு உரிய குணங்கள். ஆனால் அந்த பிடிவாதம் பிடித்தல் என்பது குழந்தை வளர வளர குறைய வேண்டுமே தவிர… குழந்தையுடன் சேர்ந்து அந்த பிடிவாத குணமும் வளர்வது நல்லதல்ல.

    பிடிவாதம் செய்யும் குழந்தைகள் விஷயத்தில் அந்த குடும்ப உறுப்பினர்கள் தான் முதல் காரணமாக இருக்கிறார்கள். "என் பேரன் அப்படியே எங்க அப்பா மாதிரி நினைச்சதை சாதிச்சிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பான்", "அம்மா அப்பா வாங்கி கொடுக்கலையா அழாதே மாமா வாங்கித் தருகிறேன் நீ கவலைப்படாதே" "உனக்கு என்ன வேண்டுமோ அதை கேளு அதை வாங்கி கொடுக்க தானே அம்மா அப்பா இருக்கிறோம்" இதுபோன்ற கூற்றுகள் குழந்தை மனதில் நாம் என்ன நினைத்தாலும் நடந்து விடும், நமக்கு கேட்பதை வாங்கிக் கொடுப்பது இவர்களுடைய கடமை, நாம் நினைத்ததை செய்து தருவதற்கு தான் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து விடுகிறது.


    ஆரம்பத்தில் குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பது இயல்பு என்றாலும் தான் நினைத்தது நடக்கும் வரை அழுது கொண்டே இருப்பது, கத்தி அலறுவது, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிவது, கீழே விழுந்து உருண்டு புரண்டு அழுவது போன்றவை பிடிவாதத்தின் அடுத்த நிலைகளாகும். குழந்தைகளை இந்த நிலையிலேயே சரி செய்யாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு சிறு சிறு தோல்விகளை கூட தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவும், தான் நினைத்த காரியம் நடந்தே ஆக வேண்டும் என்ற தவறான மனப்பான்மை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். சிறிதும் தன்னம்பிக்கை இன்றி தான் நினைத்ததை அடுத்தவர்கள் செய்து முடித்து தர வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி காணப்படும்.

    குழந்தைகள் ஏதேனும் பொருட்களைக் கேட்டு அடம் பிடித்து நாம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்றால் அந்த சூழ்நிலையை குழந்தையிடம் எடுத்துரைக்க வேண்டும். "அம்மாவிடம் இப்பொழுது காசு இல்லை, அப்பாவிற்கு இன்னும் சம்பளம் வரவில்லை, தாத்தா உனக்கு இன்னொரு நாள் வாங்கித் தருகிறேன்" இதுபோன்ற உண்மை காரணங்களை கூற வேண்டும். இப்பொழுதே வேண்டும் என்று குழந்தை அடம் பிடித்தால் அடுத்த முறை என்றால் அடுத்த முறை தான் என்று குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.


    குழந்தை கேட்கும் பொருட்களை உடனே வாங்கி கொடுப்பதை முதலில் நிறுத்தி… அது அந்த குழந்தைக்கு தேவையா? இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த பொருள் உபயோகமானதுதானா? என்று யோசித்து அந்த குழந்தையுடன் அதை கலந்தாலோசித்து வாங்குங்கள்.

    குழந்தை ஏதேனும் பொருளுக்கு அடம் பிடிக்க தொடங்கினால் அது அடம்பிடித்து முடிக்கும் வரை யாரும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாலே அந்த குழந்தை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சிறிது நேரத்தில் தன்னாலே சமாதானம் ஆகிவிடும்.

    குழந்தைகளுக்கு தேவை இல்லாத பொருட்களுக்கு இல்லை என்று சொல்லிப் பழகுங்கள் எது நினைத்தாலும் கிடைக்கும் என்ற மனப்பான்மையை இது மாற்றும்.

    • உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
    • எந்த வேலையும் செய்ய முடியாத சோர்களை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.

    செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக்கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள்.

    நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகள் செல்போன் மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது. இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    இதுதவிர, தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட, பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கலாம்.
    • ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

    பாதாம், பிஸ்தா போன்ற விலை உயர்வான நட்ஸை விட, எளிதாகக் கிடைக்கும் வேர்க்கடலை குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்குகிறது. வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு அருமையான பருப்பெனில் அது நிலக்கடலைதான்.

    பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு ஏற்படுவதுடன், மார்பகக் கட்டி உருவாவதையும் தடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பெரிதும் தேவைப்படும் போலிக் ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச் சத்து, வைட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் போன்றவை வேர்க்கடலையில் அதிகம் நிறைந்துள்ளன.

     

    கருவின் மூளை, நரம்பு வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது. நீரிழிவு நோயைத் தடுப்பதில் இது பெரும் பங்காற்றுகிறது. இதி மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. இதில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான கால்சியத்தை தந்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. நிலக்கடலை பித்தப்பை கல்லைக் கரைக்கிறது. தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட, பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கலாம்.

    நிலக்கடலை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மையல்ல. அளவாக இதை சாப்பிட நல்ல பலன்களைத் தரும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய் வருவதையும் தடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

    இதில் உள்ள பாலிஃபீனால் நமக்கு நோய் வருவதைத் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இளமையை பராமரிக்கவும் உதவுகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் 3 நியாசின் இதில் அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது. உடலின் இரத்த ஓட்டத்தை நிலக்கடலை சீராக்குகிறது. நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டி சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, மன அழுத்தத்தையும் போக்குகிறது.

    இவ்வாறு பல நன்மைகளைத் தரும் வேர்க்கடலையை உண்போம். உடல் நலம் காப்போம்.

    • ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது.
    • பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல.

    குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

    இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.


    பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

    சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

    சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

    கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.


    லோ இன் கலோரிஸ் என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டைலோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

    பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

    ×