என் மலர்
குழந்தை பராமரிப்பு
- படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள்.
- உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம்.
நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல் புரியாமலேயே மனத்தில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆதலால், நினைவில் வைத்துக்கொள்வது எப்போதும் ஒரு பிரச்சினையே அல்ல. வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும், பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. அந்தத் தடையை எப்படி வெல்வது?
படித்தவற்றைச் சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்கு கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்குப் பிடித்த பழங்களையோ, கடலைகளையோ, உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள்.
படிப்பதைவிட மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள். வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது. படிக்கும்போதும், சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றைத் திரும்ப வாசிப்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும்.
படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரிலிருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்கு வந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும். கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களிலிருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன்மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம்.
காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஜாக்கிங்கூடச் செல்லலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
- இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது.
- ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது.
உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப் புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள். உலக ஆட்டிசம் தினம், கடந்த 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. ஆட்டிசம் நோயல்ல, மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே.
இந்தியாவில் 100 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இந்த குறைபாட்டை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம். இந்தியாவில் 20 லட்சம் பேர் இந்த குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.
மேலும் இந்த அளவானது ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. இவர்களுக்கு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள். அதை சிறந்த பயிற்சியின் மூலம் வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் முழு பொறுப்பு.இந்த குழந்தைகளின் பிரதான பிரச்சினை மற்றவர்களோடு பழகுவது தான். மனதளவிலும், உடலளவிலும் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இவர்களால் மேம்பட்டு செயல்பட முடியும். குழந்தை பிறந்தவுடன் ஆட்டிசம் உள்ளதா? என்பதை முகபாவனை உணராமை, சத்தங்களை உணர முடியாமல் இருப்பது, கண்ணோடு கண் பார்க்காமல் இருப்பது, தனியாக இருப்பதை விரும்புதல், சொற்களை திரும்ப திரும்ப பேசுதல், பேசுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டிசம் ஏற்பட காரணமாக குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. மரபு ரீதியான காரணங்கள் குறைவு தான். சராசரி வயதை தாண்டி குழந்தை பெற்றுக் கொள்வது, மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவை காரணமாக சொல்லப்படுகிறது.
நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி இயல்பான வாழ்க்கையை அளிக்கும் சிகிச்சைகள் உள்ளன. முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதால் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகம் தேவை. இவர் களுக்கென தனி சிறப்பு பள்ளிகள் உள்ளன. அரசின் சார்பில் இவர்களுக்கு அனைத்து தெரபிகளும் வழங்கும் மையங்கள் மருத்துவ கல்லூரிகள் என்ற அளவில் தான் உள்ளது. அரசானது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆட்டிசத்துக்கான சிகிச்சையை கொண்டு வர வேண்டும். அப்போது தான் சிகிச்சைகளும் எளிமையாகும், விழிப்புணர்வும் அதிகரிக்கும்.
- குழந்தைகளை குளிப்பாட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
* குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.
* பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.
* குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.
* குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.
* தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.
* வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
* தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
* குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.
* குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.
* குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
குளிர்காலத்தில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்பாஞ்ச் மூலம் உடலை துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை குளிப்பாட்ட வேண்டும் என்று முடிவு செய்தால் சூடான வெந்நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தையின் தோல் சூடான வெந்நீரால் சேதமடையும். எனவே சூடான வெந்நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்ட பயன்படுத்த வேண்டும்
பெரும்பாலும் குழந்தையை குளிர்ந்த தண்ணீரில் குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தால் குழந்தைக்கு சளி காய்ச்சல் உள்பட சில உபாதைகள் வரலாம்.
குழந்தையின் உடல்நிலை பேணுவதற்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் செய்யலாம் குழந்தைகளுக்கான தரமான எண்ணெய் வாங்கி குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்
அதே போல் குழந்தைகளை பாதுகாக்க சரியான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்ததந்த பருவ நிலைக்கு ஏற்ற ஆடைகளையே குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
- மேலே கூறிய இந்த முறைகளை பின்பற்றி பிறந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
- டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை.
- கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
ஏடீஸ் (Aedis) கொசுக் களால் பரப்பப் படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை
டெங்கு காய்ச்சலின் அறி குறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோல் சிவப்பு ஆகுதல் (Skin Rash) சில கடுமையான சந்தர்ப்பங்களில் டெங்கு காய்ச்சல் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு வழிவகுக்கும், இது இரத்தப்போக்கு, குறைந்த அளவிலான இரத்த தட்டுக்கள் மற்றும் அபாயகரமான அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தே கிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவது அவசியம்.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சல் பாதிப் புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?
ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முறையை பற்றி கூறுக?
டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதே வைரஸ் பரவாமல் தடுக்க ஒரே வழி
டெங்கு காய்ச்சலைத் தடுக்க சில வழிகள்:
கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றவும், ஏடிஸ் கொசு தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. எனவே பூந்தொட்டிகள் , வாளிகள், தூக்கி எரியக்கூடிய டயர்கள் உட்பட உங்கள் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது அவசியம். கொசு விரட்டியை பயன்படுத்துங்கள். கொசுக்கள் வராமல் இருக்க தோல் மற்றும் ஆடைகளில் கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள். கொசுக் கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீண்ட கை சட்டை மற்றும் பேன்ட்களை அணியுங்கள்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க திரைகளைப் பயன்படுத்தவும். மேலும் கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்போது விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைக்கவும். டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக் சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக்குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட்டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.
மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு காய்ச்சல அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.
டெங்குவினால் மூளைக்காச்சல் வருமா?
மிகவும் அரிதாக வரலாம். ஒருசில நேரங்களில் டெங்கு வைரஸ் மூளை நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். அப்படி பாதிப்பிற்கு உள்ளானால் தலைவலி, வாந்தி, மயக்க நிலை மற்றும் வலிப்பு ஏற்படலாம். உடனடி தீர்வு சிகிச்சை செய்வது அவசியம்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவ மனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவ னந்தபுரம் சாலை, பாளை யங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783.
- இப்போதுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை
- குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
இன்றைய வேகமான உலகில் வயதில் பெரியவர்கள் மட்டுமல்லாது வயதில் சிறிய குழந்தைகளும் கொலஸ்ட்ரால் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.முன்னர் இருந்தது போல இப்போதுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, செல்போன் மற்றும் டிவிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.இதுபோன்ற உட்கார்ந்த வாழ்க்கை மற்றும் அதிகப்படியான நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் இன்றைய கால குழந்தைகள் இளம் வயதிலேயே அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர்.உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது இரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக்கை உருவாக்க காரணமாக இருக்கிறது.இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயத்தின் ஆரோக்கியம் மோசமடைகிறது.
உடல் பருமன், ஜீன், மோசமான உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடலில் கொலஸ்டராலின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.பெரும்பாலும் குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்பதால் நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர்கள், பிரஞ்சு ப்ரைஸ் மற்றும் சிப்ஸ் போன்ற எண்ணெயில் வறுத்து பொறித்த உணவு வகைகளை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.இதுதவிர இனிப்பு சுவை அதிகம் நிறைந்த பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள் மற்றும் கேக் போன்ற இனிப்புப் பொருட்களை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது.ஏனெனில் அவற்றில் நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.குழந்தைகளுக்கு கொலஸ்டராலின் அளவை குறைக்க அவர்களை உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும்.தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தையின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.
- கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
சமீபத்தில், தன் மருத்துவமனைக்கு அருகிலிருந்த பள்ளி ஒன்றில் உள்ள மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யச் சென்றிருந்தார் கண் மருத்துவ நண்பர் ஒருவர். அப்போது 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவர், தனது கண் மங்கலாகத் தெரிவதாகவும், தான் அணிந்திருக்கும் கண்ணாடியின் 'பவர்' அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதாகவும், கரும்பலகையில் எதையாவது எழுதி ஆசிரியர் படிக்கச் சொன்னால் கண்ணாடி போட்டாலும் சரியாகத் தெரியவில்லை என்றும் புலம்பியிருக்கிறார்.
அந்த மாணவனின் கண்களைப் பரிசோதித்தபோது அவருக்கு 'கேரட்டோகோனஸ்' (keratoconus) என்ற கருவிழிக் கோணல் பார்வை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக கொலாஜன் கிராஸ் லிங்க் (collagen cross linking) என்ற சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய கருவிழி பாதிப்பு அதிகமாவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும், பக்கத்தில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், நன்றாகப் படிக்காதவர்கள், நோட்டில் அடித்து அடித்து எழுதுபவர்கள் ஆகியோரை அழைத்து வாருங்கள் என்று அந்த மருத்துவர், ஆசிரியர்களிடம் கூறினார். மாணவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவர்களில் பலருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு மாணவன், ஆசிரியர் பாடம் நடத்தும்போது கரும்பலகையில் உள்ள எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லையென்றால் பக்கத்துப் பையனைப் பார்த்து 'காப்பி' அடிப்பான். அப்போது நோட்டில் அடித்து அடித்து எழுதுவான். இப்படி இருந்தால் உடனடியாகக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இப்படியான மாணவர்களைக் காண நேர்ந்தால், உடனே அவர்களைத் திட்டவோ அடிக்கவோ செய்யாமல், ஒவ்வொரு மாணவனையும் கடைசி பெஞ்சில் அமர வைத்து, அதாவது இருபது அடி தூரத்தில் அமரவைத்து ஒரு கண்ணைக் கையால் மூடிக்கொண்டு மற்றொரு கண்ணில் கரும்பலகையில் எழுதுவது தெரிகிறதா என்று ஆசிரியர் பரிசோதிக்க வேண்டும். பெரும்பாலும் வகுப்பறை நேரத்தில்தான் மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியும்.
மாணவனின் பார்வைக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதுகுறித்து விளக்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து கண்ணாடி அணிந்துகொள்ள குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பார்வையைக் கொடுப்பது நம் சமூகக் கடமை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் உணர வேண்டும். நல்ல பார்வையே தொலைநோக்கில் பார்வையைக் கொடுக்கும்!
- கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
- தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
* தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.
* தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
* தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
* தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.
* இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.
* தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.
* தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.
* தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.
* கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
* இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
* அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
* வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.
மலர்விழி, பெங்களூரு.
- ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டும்.
- குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.
உங்கள் குழந்தை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் அமர்ந்து பார்க்கிறது என்றால் அதற்குக் கிட்டப் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது.
குழந்தைகள், கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தாலோ, கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தாலோ, அடிக்கடி கண் கட்டி வந்தாலோ அந்தக் குழந்தைக்குக் கண் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அடிக்கடி குழந்தைகளுக்குத் தலைவலி ஏற்பட்டாலும், பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்று உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தைகள் வெயிலில் கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தால், அவர்களின் விழித்திரையில் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விழித்திரை விலகல் மற்றும் கிளாக்கோமா வரவும் சாத்தியமுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இதன் பாதிப்பைத் தடுக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பதால், பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.
- கண்ணில் உள்ள தசைகளை வலுப்படுத்த கண்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம்.
- தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போதும் கண் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கண்ணில் உள்ள தசைகளை வலுப்படுத்த கண்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். அதாவது கண்களை அடிக்கடி நன்றாக சிமிட்டுமாறு குழந்தைகளை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கண்களுக்கு நல்ல ஈரப்பசை கிடைத்து, கண் எரிச்சலும், அரிப்பும் ஏற்படாது.
மேலும் பார்வை திறனை அதிகரிக்க வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல சில முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினை சிறிது சிறிதாக குறைந்து விடும். தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போதும் கண் பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் கருவிழிகளை மட்டும் இடமிருந்து வலமாக சுற்றுதல், பின்னர் வலமிருந்து இடமாக சுற்றுதல், கருவிழிகளை மேலும் கீழும் பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம் ஒருவர் தெளிவாகவும், கவனமாகவும் பார்க்க முடியும். மேலும் கண் மருத்துவர், குழந்தைகளின் பார்வை திறனுக்கு தக்கவாறு, தேவையான கண் பயிற்சிகளையும் பரிந்துரை செய்வார்.
பார்வைக் குறைபாட்டைத் தடுக்க…
# ஒவ்வொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்கும் முன் மற்றும் வருடம் ஒரு முறை என முழுக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்கு வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்களான கேரட், கீரை வகைகள், காய்கறிகள், பப்பாளி, மீன், பால், முட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
# குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெளிச்சம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்குக் கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். அதை விடுத்து நாமாகவே வைத்தியம் செய்யக் கூடாது.
# வீடியோ கேம், செல்போன் விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதிலிருந்து குழந்தைகளைத் தடுத்து, டென்னிஸ், பாட்மிண்டன் போன்ற இதர மைதான விளையாட்டுகளில் அவர்களைக் கவனம்செலுத்த வைக்க வேண்டும்.
- குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும்.
- குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து 6 அடி தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும். அப்போது தான் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். மேலும் குழந்தைகள் கண்களில் ஏதேனும் பிரச்சினை என்று தெரிவித்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். தாங்களாகவே வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள், 80 சதவீதக் கல்வியைத் தங்கள் கண்கள் மூலம்தான் கற்கிறார்கள். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் நல்ல கண் பார்வை முக்கியம். ஒரு குழந்தையின் எதிர்காலம் முழுவதும் அந்தக் குழந்தையின் நல்ல பார்வையைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைக்க அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வர வேண்டும்.
* பள்ளிக்கூடங்களில் உள்ள கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துகளை படிக்க குழந்தைகள் சிரமப்படுதல்
* குழந்தைகள் ஏதேனும் எழுத்தை தெளிவாக பார்க்க கண்களை அடிக்கடி தேய்த்தல்
* தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க, கண்களை சுருக்குதல்
* படிக்கும்போது புத்தகங்களை முகத்திற்கு மிக அருகில் வைத்து படித்தல்
* குழந்தைகள் கண் வலி, தலை வலி என தொடர்ந்து கூறுவது
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கண் மருத்துவரை பார்ப்பது நல்லது.