search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பலி
    X

    நெல்லை அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பலி

    • மானூர் அருகே உள்ள மேல பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் காசிபாண்டி(வயது 41). விவசாயி.
    • இவர் கடந்த மாதம் 18-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள மேல பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் காசிபாண்டி(வயது 41). விவசாயி. இவர் கடந்த மாதம் 18-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமையன் பட்டியை அடுத்த வேப்பங்குளம் விலக்கு பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் காசிபாண்டி மற்றும் அவரது நண்பர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காசிபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×