search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே 23 கிலோ புகையிலையை பதுக்கி வைத்த வியாபாரி கைது
    X

    ஆலங்குளம் அருகே 23 கிலோ புகையிலையை பதுக்கி வைத்த வியாபாரி கைது

    • கடையின் அருகே உள்ள காலியிடத்தில் திருமலைகுமார் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து மேலத்தெருவை சேர்ந்தவர் திருமலைகுமார்(வயது 40). இவர் அப்பகுதியில் நெல்லை-தென்காசி சாலையில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.

    இவர் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கடையின் அருகே உள்ள காலியிடத்தில் அவர் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். புகையிலையையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    Next Story
    ×