என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு நடைபயண பேரணி
- பேரணி மேம்பாலத்தில் தொடங்கி சாய் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.
- உடல் ஆரோக்கியம், இதயத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தரங்கம்பாடி:
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி மேம்பாலத்திலிருந்து சாய் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை தலைவர் மருத்துவர் பாரதிதாசன் கொடியசைத்து நடைபயண பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இதயத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நடை பயண பேரணியில் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு அமைப்பு தலைவர்கள், மருத்துவர்கள், தன்னார்வர்கள், யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தனியார் மருத்துவமனை, முதுநிலை வணிக குழுவினரும், மருத்துவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்