search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
    X

    கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    • ஆட்டு இறைச்சியை கம்பியிலிருந்து எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெரிய மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களது மகன் பால்பாண்டி (வயது 16). அந்த அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அங்காளஈஸ்வரி ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தோட் டத்தில் உள்ள ஆடு இறந்து போனது. இதனையடுத்து ரங்கசாமி ஆட்டை அங்காள ஈஸ்வரியிடம் கொடுத்து அவர் ஆட்டை உப்பு கண்டம் போட்டு வீட்டில் உள்ள கம்பியில் காய வைத்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வம், அவரது மகன் பால்பாண்டி ஆகியோர் கம்பியில் காய வைக்கப்பட்டு இருந்த ஆட்டு இறைச்சியை எடுத்தனர். அப்போது திடீரென 2 பேரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×