search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கையில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தயாராகும் கம்பம் மாணவ-மாணவிகள்
    X

    யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ-மாணவிகள்.

    இலங்கையில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தயாராகும் கம்பம் மாணவ-மாணவிகள்

    • தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    கம்பம்:

    இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் வருகின்ற ஜூன் மாதம் 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சர்வதேச யோகா போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டிகள் பழனியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில யோகாசன சங்கத் தலைவர் யோகி ராமலிங்கம் பங்கேற்று மாணவ- மாணவிகளை தேர்வு செய்தார்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையின் சார்பில் பங்கேற்ற மாண வர்கள் தேர்வு செய்ய ப்பட்டனர். அவர்கள் தீவிர யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட யோகா சங்க தலைவர் துரை ராஜேந்திரன் கூறியதாவது, சர்வதேச யோகா போட்டிகள் கொழும்பில் நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்கும் 14 மாணவ-மாணவிகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம். அந்த மாணவர்கள் ஏற்கனவே பலமுறை மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள். மேலும் கடந்த முறை மலேசியாவில் நடைபெற்ற யோகா போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். எனவே அவர்களுக்கு சர்வதேச போட்டி என்பது புதிது அல்ல இருப்பினும் தீவிர பயிற்சி அளித்து வருகின்றோம் என்றார்.

    Next Story
    ×