search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பரவலான மழை
    X

    பேச்சிப்பாறை அணை கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் பரவலான மழை

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • நாகர்கோவிலில் அதிகபட்சமாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாகர்கோவில்:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் பரவ லாக மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளின் மழை அளவு வருமாறு- கன்னிமார்- 9.4, இரணியல் -8.4,பாலமோர் -7.2,பூதப்பாண்டி- 7.2, மாம்பழத் துறையாறு - 6.8,குருந்தன்கோடு-6.4, முள்ளங்கினாவிளை- 6.4,ஆனைகிடங்கு -5.2, குளச்சல் - 3.6, மைலாடி -3.6, கோழிப்போர்விளை -3.4,அடையாமடை -3, கொட்டாரம் - 1.8, பேச்சிப்பாறை - 1, பெருஞ்சாணி - 1

    இந்த மழையின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.95 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 472 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 531 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 60.50 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 153 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 375 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×