search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ேபரணி
    X

    வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ேபரணி

    • கால்நடை பராமரிப்புதுறை சார்பாக
    • வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ேபரணி நடைபெற்றது

    கரூர்,

    குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் நாய்களுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.முகாமை குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தொடங்கி வைத்தார், மேலும் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட முக்கிய வீதிகளில் கல்லூரி மாணவிகள், குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது, தொடர்ந்து குளித்தலை மணதட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுகிடையே வெறிநோய் தடுப்பூசி, வெறி நோய் பரவுவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது,நிகழ்ச்சியில் குளித்தலை நகர் மன்ற கவுன்சிலர் சையத் உசேன், நகர் மன்ற அலுவலர் கோவிந்தராஜ், நகர்மன்ற மேலாளர் சிவலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×