என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
- க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
- சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்
கரூர்,
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்., பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். இதில் பெரியதாதம் பாளையத்தில் ரூ.1.05 லட்சம் மதிப்பில் நடந்து வரும் சமையல் கூடம் புனரமைக்கும் பணி, சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணி, வீடுகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை ரூ.3.90 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி, தென்னிலை மேற்கில் ரூ.25.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்., அலுவலக கட்டட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூர்ணமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்