search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன விபத்தில் முதியவர் படுகாயம்
    X

    வாகன விபத்தில் முதியவர் படுகாயம்

    • இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சம்பவம்
    • வாகன விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்

    கரூர்:

    குளித்தலையை அடுத்த, சேப்ளாபட்டியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவர், இரு சக்கர வாகனத்தில் மாகாளிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கழுகூர் -மகாளிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே, இனுங்கூரை சேர்ந்த பால முருகன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது.இதில், தங்கராசு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தங்கராசு மனைவி சின்னபொண்ணு கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×