search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சை தொட்டு கும்பிட்டு  கண்ணீர் மல்க விடைபெற்ற டிரைவர்
    X

    பஸ்சை கும்பிட்டு கட்டியணைத்து பணி ஓய்வு பெற்ற டிரைவர் முத்துப்பாண்டி. 

    அரசு பஸ்சை தொட்டு கும்பிட்டு கண்ணீர் மல்க விடைபெற்ற டிரைவர்

    • அரசு பஸ்சை தொட்டு கும்பிட்டு கண்ணீர் மல்க டிரைவர் விடைபெற்றார்.
    • டிரைவர் வேலையால் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது

    மதுரை

    மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. அரசு பஸ் டிரைவரான இவர், திருப்பரங்குன்றம் போக்கு வரத்து பணிமனையில் 30 வருடங்களாக பணியாற்றிய முத்துப்பாண்டி நேற்று ஓய்வு பெற்றார்.

    முன்னதாக பயணிகளை ஏற்றிக் கொண்டு இறுதியாக பயணம் மேற்கொண்ட முத்துப்பாண்டி பின்னர் பணிமனையில் தான் ஓட்டிவந்த அரசு பஸ்சை நிறுத்தினார்.

    பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் நெகிழ்ச்சி யுடன் காணப்பட்ட முத்துப்பாண்டி நீண்ட நாட்களாக தான் இயக்கி வந்த அரசு பஸ்சை வாஞ்சையுடன் பார்த்து கண் கலங்கினார். தொடர்ந்து பஸ் என்ஜின், படிக்கட்டுகளை தொட்டு கும்பிட்டார்.

    பின்னர் பஸ்சின் முன்புறம் வந்த முத்துப்பாண்டி இரு கரங்களால் கும்பிட்டு பஸ்சை வணங்கி கண்ணீர் மல்க விடை பெற்றார். அப்போது அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை தேற்றி வழியனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து முத்துப் பாண்டி கூறுகையில், எனது பெற்றோருக்கு அடுத்தபடி யாக டிரைவர் தொழிலை நேசித்து 30 வருடங்களாக பயணிகளை பாது காப்பாக ஏற்றிக் கொண்டு உரிய இடங்க ளுக்கு அழைத்துச் சென்றேன். டிரைவர் வேலையால் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது என கூறினார்.

    Next Story
    ×