என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு
- 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவிநாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய கணிணி படிப்பிற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண் பாலினத்தவராக இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். வட்டார ஒருங்கிணைப்பாளரின் ஊதியம்:ரூ.12,000.தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு,இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / மகளிர் திட்டம்,நம்பர்.305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,திருப்பூர் -641 604,தொலைபேசி எண். 0421 2971149 என்ற முகவரிக்கு நேரிலோ / தபால் மூலமாகவோ9.2.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்