என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் மீது வழக்கு
குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி வடக்கு தோப்புப் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரின் மனைவி பிரேமா ( வயது 26). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் ராஜேந்திரன் மது அருந்திவிட்டு வருவதால் கணவன், மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் இரும்பு கம்பியால் பிரேமாவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரேமா கொடத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story