search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனத்தில் வந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை, பணம் பறிப்பு
    X

    வாகனத்தில் வந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை, பணம் பறிப்பு

    • வாகனத்தில் வந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை, பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
    • பூப்பு நீராட்டு விழாவிற்கு சென்று வந்த போது நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்காட்டை அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி, கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சம்மன்தான்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் மனைவி ரஞ்சிதா(வயது26). இவர் காயம்பட்டியில் நடந்த பூப்பு நீராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு தனதுஇரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

    ஆன்டிபட்டி மேல கன்மாய் பாலம் அருகே வந்த போது, மர்ம நபர்கள் 2 பேர் திடீரென் ரஞ்சிதா மீது மிளகாய் பொடியை தூவி, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஏழுரை பவுன் தங்க சங்கிலியையும், வைத்திருந்த பணம் பத்தாயிரத்தையும், மொபைல் போனையும் பறித்து கொண்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து நமணசமுத்திரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் வழக்குபதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளையும் பார்த்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×