search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம்
    X

    தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தபோது எடுத்த படம். 

    தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம்

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் நெற்குப்பை பேரூர் இளை ஞர் அணி சார்பாக திராவிட மாடல் அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் விரமதி மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, நெற்குப்பை நகரச் செயலாளர் கே.பி.எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட கவுன்சிலர் ஏ.டி.என்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் கே.ஆர்.ராமசாமி, வாழ்த்துரை வழங்கினார்கள். தி.மு.க. அரசு புரிந்த பல்வேறு சாதனைகளை கழக பேச்சாளர் கரூர் முரளி பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் நம்பி, ஒன்றிய வழக்கறிஞர் அணி நாகூர் கனி, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், மகி பாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கழக நிர்வாகிகளான கஸ்தூரி சின்னையா, மாரி யப்பன், ரஞ்சித், சோம சுந்தரம், திருநாவுக்கரசு, குமார், கருணாநிதி, விக்னேஸ்வரன், கணேசன், மணிக்குமார், முருகேசன், பாஸ்கர், ராமநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர், நகர கழக கிளைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை நகர இளைஞரணி அமைப் பாளர் பாண்டியன் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒன்றிய நகர இளை ஞரணி அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×