search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் லலிதா.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்- கலெக்டர் தகவல்

    • அரசு பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து சிறப்பு பரிசுத்தொகை தலா ரூ.2000, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
    • போட்டிகளுக்கான தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது;-

    மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பள்ளி , கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2000 , பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்க ட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தெரிவுசெய்து அனுப்ப வேண்டும்.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப்போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவர்எனத் தெரிவுசெய்து மாணவர்களை அனுப்பிவைத்தல் வேண்டும்.

    போட்டி களுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.

    போட்டிகள் மயிலாடு துறை தருமபுரம் ஞானா ம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 12.10.2022 அன்று நடைபெற உள்ளன.

    பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாணவர்கள் காலை 10 மணிக்கும் வருகையை உறுதி செய்திடுதல் வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்ட த்திலுள்ள மாணவ, மாணவி கள் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×