என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
Byமாலை மலர்7 Oct 2022 11:33 AM GMT
- மகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
- வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம்:
சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 25). இவரை கடந்த 2015-ம் ஆண்டு பணத்துக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(41) என்பவர் கடத்தி சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தப்பட்ட கார்த்திக்கை போலீசார் மீட்டனர். ஆனால் மகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த மகேஷ், நேற்று சென்னை பேசின்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக புழல் உதவி கமிஷனர் ஆதிமூலத்துக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று மகேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X