என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில்அழுகிய நிலையில் ஓட்டல் தொழிலாளியின் பிணம்போலீஸார் தீவிர விசாரணை
- காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், காதல் ஜோடி, திருமணம் செய்ய நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர்
- திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், திருவாரூர் குடவாசலைச்சேர்ந்த காதல் ஜோடி, திருமணம் செய்ய காரைக்கால் வந்துள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று காலை விடுதி ஊழியர் இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் அறைய மூடிக்கொண்டு வெகு நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். பின்னர், திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர். முடியாததால், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியம் மற்றும் போலீசார், விடுதிக்கு விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காதல் ஜோடி இருவரும் கை, கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அறை முழுவதும் இரத்தம் சிதறி கிடந்தது. உடனடியாக, ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது25) அக்ஷரா(25) ஆகியோர் என்பதும், இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காரைக்கால் வந்து திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும், அதற்குள், இருவரும் தங்கள் முடிவை மாற்றிகொண்டு, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் ஜோடிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து, தொடர் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்வம, காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.