search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லால் தாக்கி விவசாயி படுகொலை
    X

    கல்லால் தாக்கி விவசாயி படுகொலை

    • முருகேசன் முதல் மனைவியை பிரிந்து 2-வது மனைவியுடன் வசித்து வந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை கோபாலபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். (வயது 52). விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் முருகேசன் முதல் மனைவியை பிரிந்து 2-வது மனைவியுடன் வசித்து வந்தார்.

    இன்று காலை மல்லியகரை கருத்தராஜபாளையம் இ.பி. அலுவலகம் அருகே உள்ள கம்பிவேலி அமைக்கப்பட்ட தோட்டத்தின் எதிரே மண்சாலை ஓரம் முருகேசன் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது. உடல் அருகில் அவரது மொபட் நிறுத்தப்பட்டிருந்தது.இது குறித்து மல்லியகரை போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து முருகேசன் உடலை பார்வையிட்டனர். முருகேசன் மொபட்டில் சென்றபோது அவரை வழிமறித்து மர்ம நபர்கள், கல்லால் தாக்கி அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். முதல் மனைவியின் மகன்கள் சொத்து தகராறு காரணமாக முருகேசனை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×