search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கம் பேரூராட்சியில் கவுன்சில் கூட்டம்
    X

    செங்கம் பேரூராட்சியில் கவுன்சில் கூட்டம்

    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. செங்கம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், குடிநீர், கழிவுநீர்கால்வாய், தெருவிளக்குகள், சாலை வசதிகள் உட்பட அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது.

    வளர்ச்சி திட்ட பணிகளுக்கான 24 தீர்மானங்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்வின் முடிவில் இளநிலை எழுத்தர் பிரசாந்த் நன்றி கூறினார்.

    Next Story
    ×