search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே மர்ம நபர்கள் நடமாட்டதால் பொதுமக்கள் அச்சம்
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே மர்ம நபர்கள் நடமாட்டதால் பொதுமக்கள் அச்சம்

    இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி, ஆறாகுளம் பிரிவு, உள்ளிட்ட பகுதிகளில்,இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் புதிய ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.

    இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் சமாதானம் செய்தனர்.

    Next Story
    ×