search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூர் வெங்கடாஜலபதி கோவிலில் தேரோட்டம்
    X

    துறையூர் வெங்கடாஜலபதி கோவிலில் தேரோட்டம்

    • துறையூர் வெங்கடாஜலபதி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியினை துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெடிக்கல் முரளி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் துறையூர் ஒன்றிய தி.மு.க. கழக செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், ஒன்றிய துணைச் செயலாளர் விஜய் தர்மன், பெரிய ஏரி பாசன குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×