search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொட்டியத்தில் அடிப்படை வசதி செய்து தரகோரி ஆர்ப்பாட்டம்
    X

    தொட்டியத்தில் அடிப்படை வசதி செய்து தரகோரி ஆர்ப்பாட்டம்

    • அடிப்படை வசதிகள் செய்து தரகோரி தொட்டியத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • பழுந்தடைந்த சிமெண்ட் சாலையை சரி செய்யவும் ஊராட்சியில் உள்ள சின்டெக்ஸ் டேங்குகளுக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தோளூர்பட்டி கிளைச் செயலாளர் இந்திரஜித் பாலசமுத்திரம் கிளைச் செயலாளர் டைலர் சுப்ரமணியன் கார்த்திகைப்பட்டி கிளைச் செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பாலசமுத்திரத்தில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும், தோளூர்பட்டி கார்த்திகைபட்டி பால சமுத்திரம் கணேசபுரம் ஆகிய ஊர்களில் குடிநீர் கேட்டும் ,

    பழுந்தடைந்த சிமெண்ட் சாலையை சரி செய்யவும் ஊராட்சியில் உள்ள சின்டெக்ஸ் டேங்குகளுக்கு தண்ணீர் வசதி செய்து தரவும், கார்த்திகை பட்டியில் சாக்கடை வசதி செய்யவும் பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்யவும் மேலகார்த்திகைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரவும் தோளூர்பட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    இதேபோல நத்தம் ஏலூர்பட்டி ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×