என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம்
- சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வருகிற நவம்பர் 8-ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
- அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வருகிற நவம்பர் 8-ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதற்கிடையே வழக்கமான நடைமுறையில் ஒரு பகுதியாக அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியது.
இதுகுறித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் டுவிட்டரில் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் இன்று தலைமை நீதிபதிக்கு அடுத்து தலைமை நீதிபதியை நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை செய்ய கடிதம் அனுப்பினார் என்று தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்