search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் ஒவைசியுடன் கூட்டணிக்கு முயற்சிக்கும் காங்கிரஸ்
    X

    தெலுங்கானாவில் ஒவைசியுடன் கூட்டணிக்கு முயற்சிக்கும் காங்கிரஸ்

    • டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
    • ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் மாதவி லதா பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அல்லது அவரது தந்தையை ஐதராபாத்தில் களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஒவைசியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சைவார்த்தை நடத்தி வருகிறது.

    ஐதராபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் ஒவைசி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான முகமது பெரோஸ் கான் கூறுகையில்:-

    காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்தால் ஒவைசியுடன் நட்பு கொள்ள தயார் என மறைமுகமாக கூட்டணி குறித்து தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியை தோல்வி அடைய செய்ய எந்த கூட்டணிக்கும் தயார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×