search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆந்திராவில் இருந்து அரசு பஸ்சில் 21 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
    X

    கைதான 3 பேரையும், அவர்களை மடக்கி பிடித்த போலீசாரையும் காணலாம்.

    ஆந்திராவில் இருந்து அரசு பஸ்சில் 21 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

    • ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர்
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெங்களூருவில் இருந்து வந்த பஸ்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜன் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கைதானவர்கள் சங்ககிரி தாலுகா அரசிராமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பூபதி ராஜா, சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஆனந்தராஜ் ஆந்திர மாநிலத்தில் இருந்து பலமுறை கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்கு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் ஆட்களை வைத்து ஆந்திராவில் இருந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி பஸ்களில் கஞ்சாவை கடத்தி வந்து ஓமலூர் எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஓமலூர் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், தொடர்ந்து தற்போது 21 கிலோ கஞ்சா கடத்தி வந்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×