என் மலர்
தமிழ்நாடு

வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி, காலை உணவு தயாரிப்பு கூடங்களில் ஆய்வு செய்தார்.
- 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அந்த திட்டங்களின் நிலவரம் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
வேலூர்:
கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தில் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி, காலை உணவு தயாரிப்பு கூடங்களில் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட த்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்) முருகேஷ் (திருவண்ணாமலை) பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்) மற்றும் அரசு துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுடன் 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அந்த திட்டங்களின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு சென்றார்.
வேலூரில் கள ஆய்வில் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து 2 நாள் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்து இன்று மாலை பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.