search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை கோவிலில் வசந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    திருவண்ணாமலை கோவிலில் வசந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.
    • விழாவின் நிறைவாக 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடைபெறும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் சிறப்புக்குரியது.

    அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.

    அதையொட்டி, இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.

    நாளை முதல் வருகிற 23-ந் தேதி வரை தினமும் அருணாசலேஸ்வரருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு நேரத்தில் சாமிக்கு மண்டகபடியும் நடைபெறும்.

    விழாவின் நிறைவாக 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடைபெறும். நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    Next Story
    ×