search icon
என் மலர்tooltip icon

    மேற்கிந்தியத் தீவு

    • 4வது விக்கெட்டுக்கு விராட் கோலி, அக்சர் பட்டேல் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.
    • சிறப்பாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார்.

    பார்படாஸ்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாசில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், விராட் கோலி அரை சதம் கடந்தார். இது அவரது 39-வது அரை சதமாகும். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த பாபர் அசாம் சாதனையை சமன் செய்துள்ளார்.

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் விரைவில் அவுட்டாகினர்.

    பார்படாஸ்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.

    .

    • இந்தியா 2007-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்றது.
    • 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்தியா இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் டாஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

    இதுவரை நடந்துள்ள 8 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் 7 முறை டாஸ் வென்ற அணி கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.

    ஒரே ஒரு முறை டாஸ் தோற்ற அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்தியா 2007ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதேபோல், 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
    • அதனால் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    பார்படாஸ்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் விராட் கோலி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார்.

    இந்நிலையில், விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:

    இது விராட் கோலியின் ஆட்டம் அல்ல. அவர் விரைவாக ரன்கள் குவிக்கப்போய் தனது விக்கெட்டை பறிகொடுக்கிறார்.

    ஏனென்றால் மறுமுனையில் அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    ரோகித் ஆக்ரோஷமாக விளையாடுவதால் விராட் கோலியும் அதற்கு முயற்சிசெய்து விரைவிலேயே ஆட்டம் இழக்கிறார்.

    அவர் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். அவர் தனது பழைய பாணியில் விளையாட மறுப்பதால்தான் இவ்வாறு வெளியேறுகிறார்.

    தற்போது விராட் கோலிக்கு பேட்டிங் ரிதம் சரியாக அமையவில்லை. அவரது எல்லையில் பந்து விழுந்தால் அவர் அதை தாராளமாக முயற்சி செய்யலாம். ஆனால் அவர் ஷாட்களை உருவாக்க முயற்சிக்கிறார்.

    நீங்கள் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும்போது அவ்வாறான ஷாட்களை முயற்சி செய்யலாம். எதிரணிக்கு 300 ரன்கள் கூட வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில், சிறிது பொறுமையாகக் காத்திருந்து விளையாட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

    • நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
    • 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    ஆனாலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.

    7 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே ரசிகர்கள் அவரது பார்ம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இதுபோன்ற விஷயங்கள் சூப்பர் ஸ்டார்கள் அல்லது விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு நடக்கும்.

    முந்தைய உலகக் கோப்பைகளில் அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியும்.

    இது யாருக்கும் ஏற்படலாம். ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம். அவர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்.

    சில சமயங்களில் பெரிய வீரர்களை அழைக்கலாம், மேலும் முன்னேறி அணிக்கான உண்மையான ஆட்டத்தையும் வெல்லலாம்.

    விராட் கோலி போன்ற ஒரு வீரரை சந்தேகமின்றி நீக்க முடியாது. அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிவோம்.

    எனவே அவர் இறுதிப்போட்டியில் என்ன வழங்குவார் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
    • மேலும், இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. அட்டவணை தயாரித்துள்ளது என்றார் வாகன்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐ.சி.சி. அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

    மைக்கேல் வாகன் எனக்கு மிகவும் அன்பான நண்பர். இரவு 8 மணிக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஐ.சி.சி எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளை வெல்ல உதவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

    ஒளிபரப்பு கிரிக்கெட் போட்டிகளை எப்படி வெல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இன்னும் நடுவில் விளையாடி வெற்றிபெற வேண்டும்.

    இரண்டாவதாக, அவர்கள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சென்று வெற்றி பெற்றபோது கயானாவை ஏன் வெற்றிக்கான இடமாக நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

    உலக கிரிக்கெட்டில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

    ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

    • இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
    • 2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.

    லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.

    அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இன்று இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பதால் இந்த இறுதிப்போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே போல் முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றுமா என்று ஆவலும் அதிகரித்துள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.

    ஆனால், போட்டி நடைபெறும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை இன்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் நாளை ரிசர்வ் நாளில் போட்டி விட்ட இடத்தில இருந்து மீண்டும் துவங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ரிசர்வ் நாளிலும் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் உலகக்கோப்பை 2 அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

    2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணிக்கு சுழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.
    • இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது என்றார் அக்தர்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் கயானாவில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    இந்தியர்களால் சுழலை சமாளிக்க முடியும். ரோகித் சர்மா இங்கிலாந்தின் அதில் ரஷீத்தை சமாளித்தார்.

    ஆனால் இங்கிலாந்து அணியினருக்கு எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.

    இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது.

    அங்கே இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2-வது பேட்டிங் செய்வதாக அடம் பிடித்தனர்.

    மறுபுறம் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள். இந்த தொடரை அவர்கள் வெல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

    கடந்த ஆண்டு வென்றிருக்க வேண்டிய உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நானும் மனமடைந்தேன். ஏனெனில் அவர்கள் வெல்வதற்கு தகுதியானவர்கள்.

    தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்லவேண்டும் என ரோகித் சர்மா சொல்லி வருகிறார். அதை வெல்வதற்கு அவர் தகுதியானவர்.

    இந்நேரம் அவர் 2 உலகக் கோப்பையை கையில் வைத்திருக்க வேண்டும். இம்முறை அவர்கள் கோப்பையை விடக்கூடாது.

    மிகவும் பெரிய வீரராகவும், சுயநலமற்ற கேப்டனாக தன்னுடைய அணிக்காக விளையாடும் அவர் தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.
    • இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், கிரேடு கிரிக்கெட்டர் போட்காஸ்டில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது, கடந்த மாதம் தான் வெளியிட்ட பதிவை நினைவுபடுத்தினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமர்வுகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்.

    2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் குல்தீப் பந்துவீசாமல் இருப்பது சுழற்பந்து வீச்சாளரின் கவனமான முடிவு.

    டெல்லி அணியுடனான பயிற்சி வலைகளில் குல்தீப்பை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

    உலகக் கோப்பைக்கான எனது சொந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
    • இவருக்கு முன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள 3-வது இறுதிப்போட்டி ஆகும்.

    கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதிபெற்றது. உள்ளூரில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

    இதேபோல், கடந்த 2021-23-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

    இந்நிலையில், ரோகித் சர்மா ஐசிசி நடத்தும் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2வது கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் டாஸ் போடப்பட்டதும் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    இதையடுத்து, இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி இன்றும் 9 ரன்களில் வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில் 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது.
    • மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இன்று மாலை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானாவில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்குகிறது.

    ×