search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகாசி விசாக திருவிழா: பழனி முருகன் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
    X

    வைகாசி விசாக திருவிழா: பழனி முருகன் கோவிலில் நாளை திருக்கல்யாணம்

    • வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்க குதிரை என பல்வேறு வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம், பழனி நகரின் நான்கு ரத வீதி வழியாக வந்து, மீண்டும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×