search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    எட்டயபுரம் முப்பிடாரியம்மன் கோவில் கொடை விழா
    X

    எட்டயபுரம் முப்பிடாரியம்மன் கோவில் கொடை விழா

    • அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
    • முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி அம்மன் கோவில் தெரு செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 28-ந் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் வரை கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    மதியம் அன்னதானம் நடந்தது. இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணியளவில் கும்ப அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 2 மணி அளவில் மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று மாலை 5 மணி அளவில் முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    Next Story
    ×