என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பீகாரில் பா.ஜனதா எம்.பி. காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
- பீகாரில் கடந்த முறை பா.ஜனதா 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது.
- இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் முனைப்பில் கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் முசாபர்புர் மக்களவை தொகுதி எம்.பி.யாக அஜய் குமார் நிஷாத் இருந்து வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி மறுத்துவிட்டது. தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக காரணம் தெரிவித்த பா.ஜனதா, ராஜ் புஷன் நிஷாத்திற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த அஜய் குமார் நிஷாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் பீகார் மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பீகாரில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதும், ஒருவரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதும்தான் முக்கிய வேலை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட இறுதி ஆசை என்ன என்பதை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு முன் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது பண அதிகார தேர்தலாக இருக்காது. மக்கள் வலிமையின் தேர்தலாக இருக்கும்" என்றார். 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா பீகாரில் 40 தொகுதிகளில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்