search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு ஜாமின் பெற முயல்கிறார்: கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
    X

    இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு ஜாமின் பெற முயல்கிறார்: கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் அளிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.
    • இதுதொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 21-ம் தேதி கைதுசெய்தனர்.

    இதற்கிடையே, தனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கு வசதியாக மாம்பழங்கள் மற்றும் இனிப்புகளை அதிகளவில் சாப்பிட்டு வருகிரார். அதன்மூலம் சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் என்றும், அதன்மூலம் அவர் ஜாமின் பெற முயற்சி செய்கிறார் என்றும் அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறை வேண்டுமென்றே இதுபோன்ற புகார்களை முன் வைக்கிறது என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

    Next Story
    ×