என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மனைவியை வழி அனுப்ப வந்த போது வந்தே பாரத் ரெயிலில் சிக்கிய கணவர்
- நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
- பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வந்தே பாரத் ரெயிலில் மனைவியை வழியனுப்ப சென்ற கணவர் அந்த ரெயிலில் தானியங்கி கதவுகள் எதிர்பாராதவிதமாக மூடப்பட்டதால் ரெயிலுக்குள் சிக்கி மனைவியுடன் பயணம் செய்த சம்பவத்தை அவரது மகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த கோஷா என்ற அந்த இளம்பெண் தனது தாயுடன் மும்பை செல்வதற்காக வந்தே பாரத் ரெயிலில் ஏறுவதற்கு சென்றுள்ளார். அவர்களை வழியனுப்புவதற்காக கோஷாவின் தந்தை 2 பெரிய பைகளுடன் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். பயணத்திட்டப்படி ரெயில் வந்ததும் 2 பைகளையும் பெட்டிக்குள் வைப்பதற்காக கோஷாவின் தந்தை சென்ற நேரத்தில் தானியங்கி கதவு மூடியது.
இதனால் அந்த நபரால் ரெயிலில் இருந்து இறங்க முடியாத நிலையில் அவரும் மனைவியுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகரை அணுகிய போது, ஏற்கனவே நேரமாகி விட்டதாக கூறியதோடு, ரெயிலும் வேகம் பிடித்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என கூறி உள்ளார்.
இதனால் கோஷாவின் தந்தையும் மனைவியுடன் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகளின் பதிவுகள் இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்