search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் ஜெயிலில் அடைக்கப்படுவார் எனக் கூறினேனா?.. லாலு பிரசாத் மகள் விளக்கம்
    X

    பிரதமர் ஜெயிலில் அடைக்கப்படுவார் எனக் கூறினேனா?.. லாலு பிரசாத் மகள் விளக்கம்

    • லாலு பிரசாத்தின் மூத்த மகள் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
    • இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

    லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி. இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்லிபுத்ரா தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளார்.

    பா.ஜனதா அதிகாரத்தை இழந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என மிசா பாரதி கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வெளியிடப்பட்டடு தேர்தல் பத்திரம் தொடர்பாக விசாரணை தேவை என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தேன். ஆனால் மீடியாக்கள் நான் கூறியதை திரித்து வெளியிட்டுள்ளன.

    இது தொடர்பாக மிசா பாரதி கூறுகையில் "நான் பிரதமர் பற்றி ஏதும் கூறவில்லை. என்னுடைய முழுக் கருத்தையும் வெளியிடுவதற்குப் பதிலாக, சிதைக்கப்பட்ட பகுதியை மீடியா வெளியிட்டுள்ளது. இது பா.ஜனதாவின் எஜெண்டா.

    வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் முன்னதாக அளித்த வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி ஏதாவது பேசியிருக்கிறாரா?. எந்த பிரச்சனை குறித்தும் பா.ஜனதா பேசுவதில்லை." என்றார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இதுபோன்ற கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் பதவி மிகவும் மரியாதைக்குரியது. நாட்டில் இருந்து ஏதும் மறைக்கப்படவில்லை. மாட்டுத்தீவனம் ஊழலில் அவரது தந்தை தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் ஊழலில் மூழ்கியுள்ளது. அவள் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    Next Story
    ×