search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் 2024 - விக்சித் பாரத் திட்டம்
    X

    பட்ஜெட் 2024 - விக்சித் பாரத் திட்டம்

    • 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
    • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் சிறப்பம்சங்கள்:

    விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்த பல புதுமைகளும் மாற்றங்களும் அவசியப்படுகிறது.

    விக்சித் பாரத் என்பது இந்தியா, அடுத்து வரும் தசாப்தங்களில் பொருளாதார ரீதியாக, சமூக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உலகிலேயே முன்னிலையில் இருப்பதற்கு 75-வது குடியரசு தினத்திற்கான கருப்பொருள். இதில் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புகள் அடங்கும்.

    ஒவ்வொரு கால எல்லையில் விக்சித் பாரத் திட்டத்திற்கு மாநிலங்கள் தங்கள் இலக்குகளை எட்டுவதற்கு, ரூ.75 ஆயிரம் கோடிக்கான 50-வருட வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×