search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2024: குஜராத் வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்
    X

    ஐபிஎல் 2024: குஜராத் வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது 29 ரன்கள் எடுத்தனர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது.

    மயங்க் அகர்வால் 16 ரன்னும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னும், அபிஷேக் சர்மா 29 ரன்னும், மார்கிரம் 17 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஜோடி அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாஸ் அகமது 22 ரன்னில் அவுட்டானார்.

    குஜராத் அணி சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×